ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலை வரவேற்போம்

மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் நீதிமன்றமும் முன்னெடுத்தால் அதனை வரவேற்போம் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலதலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ” கடந்த ஆண்டைபோலவே மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிது. இந்த காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.

2 மாதங்களுக்கு இலவசமாக உணவுதானியங்களை வழங்க மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும், அதற்காக அரசுக்கு நன்றி. ஆகஸ்ட் இறுதிக்குள் 45 கோடிபேருக்கு தடுப்பூசிபோட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்குப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன் 7500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆனால் அதை கொண்டுபோய் சேர்ப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது. இதனை புரிந்து கொள்ளாமல் சில அரசியல்வாதிகள் பேசுவது வருத்தமாக உள்ளது.

ஆக்சிஜனை கொண்டுபோய் சேர்க்க ரயில், ராணுவ விமானங்களை பயன்படுத்துவது பாரட்டத்தக்கது. ஆக்சிஜனை கொண்டு போய் சேர்ப்பதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க முன் வரவேண்டும். 24*7 சேவை மையம் துவங்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கி உதவிவருகிறோம். மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் நீதிமன்றமும் முன்னெடுத்தால் வரவேற்போம்”, என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...