தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம், தமிழகமக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சட்டப் பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல்மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவைசெய்கிற அமைப்பும் ஆகும்.

நான் மாநிலத்தலைவராக பொறுப்பேற்றபோது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப் பட்டிருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிகொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பேரவையை அலங்கரிப் பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

1996ல் ஒருசட்டப்பேரவை உறுப்பினரும் அதன்பிறகு 2001ல் நான்கு சட்டப்பேரவை உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டப் பேரவை உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் M.R. காந்தி, பாஜக அகிலபாரத மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் C.சரஸ்வதி, ஆகியோர் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன் படும்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அகில பாரத தலைவர் J.P.நட்டா , உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனி சாமி மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாஜக, அதிமுக, பாமக, தமாக உள்பட தேசியஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...