சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கை

சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

.ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த 2016ம் ஆண்டுமுதல், தொழில் முனைவோர்களுக்காக, ‘விவா டெக்’ என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசினார்.

அதில் அவர் கூறியதாவது:கடந்த ஒர் ஆண்டு காலமாக, கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதனால், நாம் பல்வேறு துறைகளில், பல இடையூறுகளை கண்டுள்ளோம். இதனால் நாம் விரக்திஅடைய வேண்டியதில்லை. பதிலாக, நாம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இதேநேரத்தில், உலகமே கொரோனாவுக்கான தடுப்பூசியை தேடியது.

ஆனால், தற்போது இந்தியாவில், இரண்டுதடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்குவரும்.எதிர்கால சவால்களை கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டாளர்களுக்காக மாறுபட்ட மற்றும் விரிவானசந்தை காத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்களின் பணிதிறனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ஆறுவிதமான குறுகியகால பயிற்சியினை, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

இந்தபயிற்சி வகுப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாளை துவக்கிவைக்கிறார்.மருத்துவ துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலதேவையை கருத்தில் வைத்து, மருத்துவதுறை சாராத திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு இந்தபயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நாடுமுழுதும் உள்ள, 26 மாநிலங்களில், 111 பயிற்சி மையங்களில், இந்தபயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணி மாவட்டங்களில், 250 படுக்கை வசதிகள் உடைய, கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க, ‘பிஎம்கேர்ஸ்’ அறக்கட்டளை நிதியில் இருந்து, 41.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தபணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...