சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கை

சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் கவனம் செலுத்தவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

.ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில், கடந்த 2016ம் ஆண்டுமுதல், தொழில் முனைவோர்களுக்காக, ‘விவா டெக்’ என்ற மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநாட்டின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசினார்.

அதில் அவர் கூறியதாவது:கடந்த ஒர் ஆண்டு காலமாக, கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதனால், நாம் பல்வேறு துறைகளில், பல இடையூறுகளை கண்டுள்ளோம். இதனால் நாம் விரக்திஅடைய வேண்டியதில்லை. பதிலாக, நாம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டு இதேநேரத்தில், உலகமே கொரோனாவுக்கான தடுப்பூசியை தேடியது.

ஆனால், தற்போது இந்தியாவில், இரண்டுதடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பல தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்குவரும்.எதிர்கால சவால்களை கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில், உலகநாடுகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். முதலீட்டாளர்களுக்காக மாறுபட்ட மற்றும் விரிவானசந்தை காத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுதும் உள்ள கொரோனா முன்கள பணியாளர்களின் பணிதிறனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ஆறுவிதமான குறுகியகால பயிற்சியினை, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

இந்தபயிற்சி வகுப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாளை துவக்கிவைக்கிறார்.மருத்துவ துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலதேவையை கருத்தில் வைத்து, மருத்துவதுறை சாராத திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு இந்தபயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நாடுமுழுதும் உள்ள, 26 மாநிலங்களில், 111 பயிற்சி மையங்களில், இந்தபயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக, 276 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மற்றும் கல்யாணி மாவட்டங்களில், 250 படுக்கை வசதிகள் உடைய, கொரோனா சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க, ‘பிஎம்கேர்ஸ்’ அறக்கட்டளை நிதியில் இருந்து, 41.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தபணிகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...