புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்

‘‘கிழக்கிந்தியாவை உலோகத்தொழில் தொடர்பான உற்பத்தி மையமாக ஆக்குதல்’’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை இந்திய உலோகங்கள் மையம்நடத்தியது.

இதில் உலோகத் துறை நிபுணர்கள், எஃகு அமைச்சக அதிகாரிகள், மாநில அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு பேசியதாவது:

கிழக்கு இந்தியாவை, நாட்டின் மற்ற வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு இணையாக கொண்டுவரும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றிவருகிறார். திறமையான வேலையாட்கள், அபரிமிதமான இயற்கை வளங்கள், ஆசையுள்ள மக்கள் உள்ளதால், தொழில் நுட்பத்துடன் கூடிய உற்பத்தி சூழலை உருவாக்க கிழக்கு இந்தியா தயாராகஉள்ளது. சிலநாடுகளில் மட்டுமே, கிழக்கு இந்தியாவில் உள்ளதுபோல அபரிமிதமான இயற்கை வளங்கள் உள்ளன.

எஃகு துறையில் தொடங்கப்பட்ட பூர்வோதையா திட்டம் கிழக்கிந்தியாவில் புதிய வளர்ச்சியுகத்தை ஏற்படுத்தக் கூடியது. கிழக்கிந்தியாவில் உள்நாட்டு நீர்போக்குவரத்து வழிகள் உட்பட பல கட்டமைப்புகளை மேம்படுத்த மத்தியஅரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. கிழக்கிந்தியா வளமான கட்டிடக்கலை, கடல்சார் பொருளாதாரம், தொழில்வளர்ச்சியை கொண்டிருந்தது. அந்த பெருமையை மீட்டெடுக்கும் நேரம் வந்துள்ளது.

வளர்ச்சியும், சூழலியலும் ஒன்றாக இருக்கமுடியும். உலகம் பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்ல பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுகிறார். தொழில்வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி மற்றும் கொள்கைகள் ஆகியவை மக்களுக்கும், வர்த்தகத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அரசு கொண்டு செல்லவேண்டும்.

பசுமையான, சுத்தமான முறையில் எஃகுதயாரிப்பை மேற்கொள்ள இந்திய உலோகமையம் உதவ வேணடும். தொழில்புரட்சி 4.0-வுக்கு, புதுமையான மற்றும் நிலையான தொழில்மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...