ஜெய்ஹிந்த் அன்று வெள்ளையர்கள் பதறினார்கள் இன்று கொள்ளையர்களும், பிரிவினை பேசுபவர்களும் பதறுகிறார்கள்

ஆளுநர் உரையை படித்தவுடனேயே தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஒருவரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் சென்ற ஆளுநர் உரையை நான் பார்த்தேன். கடைசியிலே நன்றி வணக்கம், ஜெய்ஹிந்த் போட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆளுநர் உரையிலே அந்தஜெய்ஹிந்த் இல்லை என்பதை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் என்று திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேசி “ஜெய்ஹிந்த்” என்ற தேச உணர்வு மந்திரத்தை இழிவுப்படுத்தி உள்ளார்.

அதாவது ஜெய்ஹிந்து என்று குறிப்பிட்டாததால் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது என்று கூறி கொண்டாடி உள்ளனர். திமுக எம்எல்ஏ, ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுப்படுத்தியதை, அப்போது அவையில் இருந்த முதல்வர். திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், உள்ளம் மகிழ்ந்து உள்ளார். திமுக எம்எல்ஏ அவர்களின் இந்த செயலை ஒப்புக்குக் கூட இதுவரை கண்டிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொந்தளித்து போய் உள்ளார்கள்.

தேச துரோக செயல்களை ஊக்குவிப்பதிலும், சுதந்திரப் போராட்ட வீர்ர்களை கொச்சைப்படுத்துவதிலும், இந்து கடவுள்களை இழிப்படுத்துவதிலும், இந்து மத வழிப்பாட்டு முறைகளை இழிவுப்படுத்துவதிலும், தொடர்ந்து திமுக ஆதரவை நல்கி வருகிறது.

பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று தொடங்கினார்கள். இதன் மூலம் பிரிவினைவாத, தேசதுரோக, தனித்தமிழ்நாடு, திராவிடநாடு போன்ற உளுத்துப்போன சித்தாந்த்த்திற்கு புத்துயிர் கொடுக்க முயல்கின்றனர். அந்த வரிசையில் இப்போது ஜெய்ஹிந்த் இழிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஹிந்த் என்ற மாபெரும் மந்திரச் சொல்லை இந்தியாவுக்கு வழங்கியது ஒரு தமிழன். செண்பகராமன் பிள்ளை என்ற பச்சை தமிழன் தான் முதன்முதலில் ஜெய்ஹிந்த் என்ற உணர்ச்சிப் பிழம்பு கோஷத்தை உச்சரித்தார். அந்த கோஷத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் எழுப்பி அதனை இந்திய தேசிய இராணுவத்தின் கோஷமாகப்பட்டது. அதன் பிறகு சுதந்திர போராட்டத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உச்சரிக்காத வீரர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

சுதந்திர போராட்ட காலத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கேட்டால் வெள்ளையர்கள் பதறினார்கள். ஆனால் இப்போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கேட்டால், கொள்ளையர்களும், தேசத்துரோகிகளும், பிரிவினைவாத சக்திகளும் பதறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மந்திரசொல் ஜெய்ஹிந்த்

ஒவ்வொரு இராணுவவீரனின் ரத்தத்திலும் ஊறிப்போன கோஷம் ஜெய்ஹிந்த். இந்த தேசத்தை தெய்வமாக நேசிக்கின்ற ஒவ்வொரு தேசபக்தனின் ஆன்மாவிலும் உறைந்து போன கோஷம் ஜெய்ஹிந்த். அப்படிப்பட்ட புனிதமான மந்திர சொல்லை இழிவுப்படுத்தியது மட்டுமல்லாமல், திமுக எம்எல்ஏ அவர்கள் அதனை நியாயப்படுத்தியும் வருகிறார்.

அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுப்படுத்துபவர்களுக்கு துணை போது என்பது திமுகவிற்கு புதிது அல்ல. கடந்த 17ம் தேதி சுதந்திர போராட்ட மாவீரன், வாஞ்சிநாதன் அவர்களின் தியாகத்திருநாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரோ, அல்லது ஏதாவது ஒரு அமைச்சரோ அந்த மாவீரனின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. அவரது திருவுருவ படத்திற்கு கூட முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களோ அல்லது திமுக அமைச்சர்களோ மலர்தூவி மரியாதை செலுத்த முன் வரவில்லை.

ஆனால் மாவீரன் வாஞ்சிநாதனை இழிவுப்படுத்திய தேசத்துரோக கும்பல்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

திராவிட தமிழர்கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக சுதந்திர போராட்ட மாவீரன் வாஞ்சிநாதனை இழிவுப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு திமுக ஆதரவு அளித்து வருகிறது.

மற்றொரு புறம் அவர்கள், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற உன்னதமான சுதந்தி போராட்ட வீரர்களை சிறையில் அடைத்து, பல்வேறு சித்தரவதைகளையும், கொடுமைகளையும் நிறைவேற்றிய வெள்ளைக்கார கலெக்டர் ஆஷை கொண்டாடி மகிழ்கின்றனர்.

சுதந்திர போராட்ட வீர்ர்களை இழிவுப்படுத்தும் நபர்களுக்கு, திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அந்த தேசத்துரோக கும்பல்கள் ஊக்கம் பெற்று, சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றது. அந்த வரிசையில் தான் இப்போது ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை இழிவுப்படுத்தி, அதன் மூலம் ஒட்டு மொத்த சுதந்திர போராட்ட வீர்ர்களையும், தியாகிகளையும் கொச்சைப்படுத்தி உள்ளார்கள். திமுகவின் இந்த இழிசெயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜெய்ஹிந்த் கோஷத்தை இழிவுப்படுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், பகிரங்கமாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வருகின்ற காலங்களில் தமிழக சட்டசபையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற தேசபக்த முழக்கங்களை தொடர்ந்து எழுப்புவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி எல் முருகன்

பாஜக மாநில தலைவர்

One response to “ஜெய்ஹிந்த் அன்று வெள்ளையர்கள் பதறினார்கள் இன்று கொள்ளையர்களும், பிரிவினை பேசுபவர்களும் பதறுகிறார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...