ஆளுநர் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது

தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும்தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழகஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆளுநர் பயணித்தகாரின் மீதும், உடன் சென்றவாகனங்கள் மீதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி, தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்கியுள்ளனர். இது கடும்கண்டனத்துக் குரியது.

அரசியல மைப்பு சட்டப்படி, தமிழக அரசு நிர்வாகத்தின் தலைவரான ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் உருவாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்தஅளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு, இந்தச் சம்பவமே சிறந்த உதாரணம்.

தங்களின் விருப்பப்படி ஆளுநர் செயல்படவில்லை என்பதற்காக, அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் ஆளுநரைப்பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி மீது மதுரையில் தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர். இதுபோல திமுகவின் கடந்தகால வரலாறுகளை பார்க்கும்போது தமிழக ஆளுநர் மீதான இந்தத் தாக்குதல் திட்டமிட்ட ரீதியில் நடந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது.

எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆளுநர் சென்ற கார் மீதும், உடன் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்து, சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், “ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” என்ற முதலமைச்சரின் கூற்று உண்மையாகும். நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே….!

நன்றி வானதி சீனிவாசன்
பாஜக தேசிய தலைவர் மகளீர் அணி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...