தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு

தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் காலுன்றி உள்ள பாஜகவை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிகிறது.

அப்போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்நேரத்தில் மட்டும்தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சிஅல்ல; கட்சியினர் அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதிபங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் கட்சிநிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேணடும்’ என்று அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிறப்பானசேவை குறித்து தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இந்நிகழ்ச்சியை தமிழகமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கட்சியினரை அறிவுறுத்திஉள்ளார்.

முக்கியமாக, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்தின் அனைத்துபகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் பணியை புதிய நிர்வாகிகள், முழுமூச்சாக மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு அதிகநபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு கட்சிவிதிப்படி பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். .ஒவ்வொரு தொண்டரும் தங்கள்பகுதியில் குறைந்தபட்சம் 25 நபர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான அரசு உதவிகளை செய்து தக வேண்டும்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் கூட்டணிகுறித்தி தேசிய தலைமை முடிவுசெய்யும். அதேசமயம் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதில் இருந்தே களப்பணிகளில் இறங்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...