அன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது

முழுமுதற் கடவுளாம் , ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த வருடம் வருகின்ற (செப்டம்பர் 10) வெள்ளி கிழமையன்று விநாயகர் சதுர்த்திவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகரே.

1893-ம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒரு சேர மக்களிடையே எழுச்சியுற செய்ய தொடங்கப்பட்ட முறையே மக்களால் இன்றுவரை மிகப்பெரிய விழாவாக கொண்டாடபடுகிறது.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

ஆனால் இன்று ஒரு பக்கம் ஒரு கூட்டம் தவம் இருக்கிறது   ஜெபம் செய்கிறது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறைவான எண்ணிக்கையில் நடைபெற வேண்டும்  என்று

மறுபக்கம் தமிழக அரசே  பொதுவெளியில் விநாயகர் வழிபாடு கூடாது என்றும் அவரவர் வீடுகளிலேயே வழிபட்டு கொள்ளலாம் என்றும்,  இல்லாவிட்டால்  கொரோன நோய் பரவும் என்றும், இது மத்திய அரசின்  உத்தரவும் கூட என்றும் கூறி இந்துக்களின் ஒற்றுமை  திருநாளை சீர்கலைக்கும் விதமான சதி வலைகளை பின்னியுள்ளது.

மத்திய அரசு நோய்க் கட்டுப்பாடு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கூறியதே தவிர  விழாவை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கூறவில்லை இதைப் பின்பற்றி தான் பாண்டிச்சேரி கர்நாடகம் தெலுங்கானா மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் கடும் கட்டுப் பாடுகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன

மத்திய அரசின்  புதிய விவசாய சட்டத்தையோ, நீட் தேர்வையோ, புதிய கல்வி கொள்கைகளையோ, குடியுரிமை சட்டத்தையோ என்று மத்திய அரசின்  அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும், சிறிது கூட ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் திமுக அரசு, இப்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம் என்று மக்கள் நல வேஷம் கட்டியுள்ளது.

இது பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததன் வெளிப்பாடே, சுதந்திரத்துக்கு முன்பாக 1980 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பல சறுக்கல்களை, நெருக்கடிகளை சந்தித்த அன்றைய ஆங்கிலேயே அரசு  மக்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 20க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை விதித்தது. அன்றைக்கு அடிபணிய  மறுத்த, கடுமையாக எதிர்த்த முஸ்லீம் லீக் தங்கள் ஒற்றுமையின் அடையாளமாக மசூதியில் கூடும் அனுமதியை பெற்றது, ஆனால் இந்துக்களிடம் அத்தகைய ஒற்றுமைகள் இல்லாததால்  அவர்களை ஒருங்கிணைக்க விநாயக சதுர்த்தி போன்ற விழாக்கள் தேவைப்பட்டது. பால கங்காதர திலகர் போன்றோர் அதை முன்னெடுத்தனர்.

ஆனால் இன்றுவரை விநாயகர் சதுர்த்திக்கான காரணங்கள் தொடர்வது வேடிக்கை என்றால்!, ஆங்கிலேயன் செய்ததையே இன்றைய ஆளும் திமுகவும் செய்வது அதைவிட வேடிக்கை!!

நன்றி தமிழ் தாமரை விஎம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...