அன்று ஆங்கிலேயன் செய்ததையே இன்று ஆளும் திமுகவும் செய்கிறது

முழுமுதற் கடவுளாம் , ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த வருடம் வருகின்ற (செப்டம்பர் 10) வெள்ளி கிழமையன்று விநாயகர் சதுர்த்திவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகரே.

1893-ம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒரு சேர மக்களிடையே எழுச்சியுற செய்ய தொடங்கப்பட்ட முறையே மக்களால் இன்றுவரை மிகப்பெரிய விழாவாக கொண்டாடபடுகிறது.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

ஆனால் இன்று ஒரு பக்கம் ஒரு கூட்டம் தவம் இருக்கிறது   ஜெபம் செய்கிறது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறைவான எண்ணிக்கையில் நடைபெற வேண்டும்  என்று

மறுபக்கம் தமிழக அரசே  பொதுவெளியில் விநாயகர் வழிபாடு கூடாது என்றும் அவரவர் வீடுகளிலேயே வழிபட்டு கொள்ளலாம் என்றும்,  இல்லாவிட்டால்  கொரோன நோய் பரவும் என்றும், இது மத்திய அரசின்  உத்தரவும் கூட என்றும் கூறி இந்துக்களின் ஒற்றுமை  திருநாளை சீர்கலைக்கும் விதமான சதி வலைகளை பின்னியுள்ளது.

மத்திய அரசு நோய்க் கட்டுப்பாடு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கூறியதே தவிர  விழாவை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கூறவில்லை இதைப் பின்பற்றி தான் பாண்டிச்சேரி கர்நாடகம் தெலுங்கானா மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் கடும் கட்டுப் பாடுகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன

மத்திய அரசின்  புதிய விவசாய சட்டத்தையோ, நீட் தேர்வையோ, புதிய கல்வி கொள்கைகளையோ, குடியுரிமை சட்டத்தையோ என்று மத்திய அரசின்  அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும், சிறிது கூட ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்த்து வரும் திமுக அரசு, இப்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம் என்று மக்கள் நல வேஷம் கட்டியுள்ளது.

இது பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததன் வெளிப்பாடே, சுதந்திரத்துக்கு முன்பாக 1980 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பல சறுக்கல்களை, நெருக்கடிகளை சந்தித்த அன்றைய ஆங்கிலேயே அரசு  மக்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 20க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை விதித்தது. அன்றைக்கு அடிபணிய  மறுத்த, கடுமையாக எதிர்த்த முஸ்லீம் லீக் தங்கள் ஒற்றுமையின் அடையாளமாக மசூதியில் கூடும் அனுமதியை பெற்றது, ஆனால் இந்துக்களிடம் அத்தகைய ஒற்றுமைகள் இல்லாததால்  அவர்களை ஒருங்கிணைக்க விநாயக சதுர்த்தி போன்ற விழாக்கள் தேவைப்பட்டது. பால கங்காதர திலகர் போன்றோர் அதை முன்னெடுத்தனர்.

ஆனால் இன்றுவரை விநாயகர் சதுர்த்திக்கான காரணங்கள் தொடர்வது வேடிக்கை என்றால்!, ஆங்கிலேயன் செய்ததையே இன்றைய ஆளும் திமுகவும் செய்வது அதைவிட வேடிக்கை!!

நன்றி தமிழ் தாமரை விஎம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...