70 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா வந்த சிவிங்கி புலிகள்

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கி புலிகளை பூங்காவில் திறந்து விட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப் படுகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப்பின் சிவிங்கி புலிகள் வந்துள்ளன. ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் – 747 சிறப்பு ரகவிமானம் மூலம் எட்டு சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இதில் 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப்புலிகள் அடக்கம்.

நமீபியாவில் உள்ள வின்டோக் தேசிய பூங்காவில் வளர்ந்த இந்தசிவிங்கிப் புலி குட்டிகள் விமானம் மூலம் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் வந்தன.பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவில் கொண்டுவரப்பட்டன.

ஷாங்காய் கூட்டுறவு உச்ச மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, நள்ளிரவில் இந்தியா திரும்பியகையோடு மத்தியப் பிரதேசம் வருகை தந்துள்ளார். தனது பிறந்தநாளில் நமீபியாவில் இருந்துவந்த இந்த சிவிங்கிப் புலிகளை தேசிய பூங்கா வனத்தில் தற்போது திறந்துவிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான் பிரதமருடன் உடனிருந்தார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று கூறிய பிரதமர், இந்த சாத்தியப்படுத்திய நமீபிய அரசுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள் என்றார்.

இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்தது வருந்தத்தக்க ஒருநிகழ்வு, இருப்பினும் தற்போதைய அரசு புதிய ஆற்றலுடன் சிவிங்கிபுலிகளின் வசிப்பிடமாக இந்தியாவை மீண்டும் மாற்ற உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பூங்காவுக்கு தலையில் தொப்பி, கூலர்ஸ் ஆகியவற்றை அணிந்து வருகைதந்த பிரதமர், சிவிங்கிப் புலிகளை திறந்துவிட்டவுடன் அவற்றை பார்த்து ரசித்து தன்னிடம் இருந்து கேமராவில் அதைபுகைப்படம் எடுத்தார்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்னரே சிவிங்கிப்புலிகள் பல வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2020 ஆண்டு முதல் இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகளை கொண்டுவந்து வளர்க்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்துவரும் நிலையில், மேலும் சில தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...