அந்த குழந்தை

அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத் திருக்கலாம்.
மிகவும் சுலபமானமுடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம்மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.

அதை இந்த சமுதாயத்தின் தலைசிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப் படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப் படுத்தியிருப்பார்கள்.

குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை. அவள் தேர்ந்தெடுத்தது கடினமானபாதை. அவள் இன்னும் சிலநாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
அவள் பெற்றோருக்கு மட்டும் நினைவில் வலியாக அவள் இருக்கக்கூடும்.
அவளைக் குறித்து எந்த எழுத்தாளனும் எழுதப் போவதில்லை. அவளது முடிவு எந்த திரைப்படத்திலும் சொல்லப்பட போவதில்லை.

ஆனால் அந்த குழந்தை தனது உயிரைக் கொடுத்தாள். தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.தர்மத்தை கைவிடவில்லை.தர்மத்துக்கான பலிதானியாக அவள் என்றென்றும் தீபமாக நிற்கிறாள்.

உணர்வுடைய இந்து சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான காவல்தேவதையாக அவள் நிற்கிறாள். தர்மத்தின் காவல்தேவதையாக அவள் நிற்கிறாள்.

அவள் நினைவு என்றென்றும் ஒவ்வொரு ஹிந்துவின் நினைவிலும் இருக்க வேண்டும் அவ்வாறு அந்நினைவு நின்று ஒளி கொடுக்க அக்குழந்தை தெய்வமாகவே போற்றப்பட வேண்டும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம் எப்படி வாழவேண்டுமென்பதைக் காட்டி சனாதன தர்மம் உயிரினும் உயந்ததென்பதைக் காட்டிய அந்தகுழந்தை இன்று இந்த மண்ணின் காவல் தெய்வம்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று அவளுக்கென்று தீபம் ஏற்றுவோம். அவள் நினைவாக ஒரு தெய்வ ஆலயமும் அவள் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் ஆலயத்திலும் ஒவ்வொரு குழந்தைகள் இந்து நூலகம் எழுப்புவதும் பாரத அரசே இக்குழந்தையின் நினைவை போற்றுவதும் அவசியமான விடயங்கள்.

நன்றி அரவிந்தன் நீலகண்டன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...