இது சமூக அநீதி அல்லவா..?

சார்வாகன் என்று தமிழ்இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஸ்ரீனிவாசன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல தொழுநோய் மருத்துவர் மற்றும் மடக்க நீட்டமுடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க வைக்கும் முட நீக்கியல் முறையை உலகுக்கு அறிமுகம் செய்து ஐ.நா.வின் பாராட்டினையும், இந்திய அரசின் விருதினையும் ஒருங்கேபெற்றவர்.

இவரது இயற்பெயர் ஸ்ரீநிவாசன்.இவர் வேலூரில் 7-9-1929-ல் ஹரிஹரன்-ஜானகி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.ஸ்ரீநிவாசனின் தந்தை ஆரணியில் முதல் மருத்துவர்.சுற்றுப்புறக் கிராமங்கள் அனைத்துக்கும் ஒரேமருத்துவர் அவர்தான்.காங்கிரஸ் அபிமானியான அவர்,சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைசென்றவரும் கூட. அந்த எளிமையும் நேர்மையும் தந்தை வழியே தனயன் ஸ்ரீநிவாசனுக்கும் வந்துசேர்ந்தது.

சிறுவயது முதலே இலக்கிய ஆர்வமும் மிகுந்திருந்தது.காரணம் தாத்தா கிருஷ்ணய்யர்.காவல் துறையில் தமிழ் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றிய அவர் நல்ல தமிழறிஞர்.சைவ சித்தாந்தத்தில் தேர்ந்தவரும் கூட.வீட்டில் பெரிய நூலகத்தையே வைத்திருந்தார்.

ஸ்ரீநிவாசனின் ஒய்வுநேரம் அங்கேயே கழிந்தது.தமிழ் மட்டும் அல்லாது ஆங்கில நூல்களையும் வாசித்து அறிவையும் இலக்கிய ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டார்.

மகாபாரதத்தில் ‘சார்வாகன்’ பாத்திரம் இவரை மிகவும் ஈர்த்தது.அதையே புனை பெயராக வைத்துக்கொண்டு எழுதினார்.

இவரின் ‘கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி இருக்கின்றன. இவர் எழுத்துகள் தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் சார்வாகன் கதைகள் என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்த சீனிவாசன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு, இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் பட்டங்களை முடித்தார். 1954-ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். இலண்டனில் உடன் பணியாற்றிய டாக்டர் என்.பத்மாவுடன் திருமணம் நடைப்பெற்றது.எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார்.

இந்தியா திரும்பிய சீனிவாசன் முதலில் முட நீக்கியல் வல்லுநராகத் தனது பணியைத் தொடங்கினார். 1960-இல் மங்களூரிலுள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றினார்.அங்கு தொழுநோயில் இருந்து குணமான அப்துல்லா என்பவரின் நீட்ட, மடக்க முடியாத விரல்கள் மற்றும் கரங்களைக் கண்டு இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். ஒரு பிரத்யேக முறையில் முயன்று சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்து வியக்கத்தக்க வெற்றியைக் கண்டார்.

அப்துல்லா இயல்பு நிலையை அடைந்தார்.அதுவரை தொழுநோய் குணமான பின்னரும் பழையபடி செயல்பட முடியாமல் பலரும் இருந்து வந்தனர். தொழுநோயால் குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு இவர் கண்டுபிடித்த இந்த அறுவைச் சிகிச்சை முறை பலரது கைகள், விரல்கள் செயல்பட உதவிகரமாக இதன் பின் இருந்தது.

இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறையை ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு அழைத்துப் பாராட்டியதோடு, ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று இவரது பெயரையே இம்முறைக்குச் சூட்டியது.

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, அதன் இயக்குநராக உயர்ந்து 1984-இல் இவர் பணி ஓய்வுபெற்றார்.

அதன் பிறகு, பல்வேறு நாடுகளின் மருத்துவக் கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றினார்.

பார்க்கவே அருவருப்பாக உணரும் தொழுநோயாளிகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர், எவரிடமும் கட்டணம் என்று எதுவும் வசூலித்ததில்லை.

பல வெளிநாடுகளில் இவர் கண்டறிந்த சிகிச்சை முறை பயன்படுத்த படுகிறது.முடநீக்கியல் பிரிவில் இவர் ஆங்கிலத்தில் பல நூல்களையும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை உலக அளவிலான ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறார்.indian journal of Leprosy இழதழில் 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். உலக சுகாதாரக் கழகத்தின்( WHO) உறுப்பினராக 20 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

கல்லூரிக் காலத்திலிருந்தே பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கும் இவருக்கு1984-ல் பத்மஸ்ரீ விருது, 2004-ம் ஆண்டுக்கான சர்வதேச காந்தி விருது பெற்றவர். எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் விருதும் பெற்றவர்.

தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொளளாமல்,தனது மருத்துவச் சாதனைகளைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்தும் சத்தமே இல்லாமல் பல சாதனைகள் நிகழ்த்தியவர்தான் சார்வாகன் என்ற ஸ்ரீநிவாசன்.

அவருடைய இறுதி நாள்களில் அவரைச் சந்தித்தது பற்றி எழுத்தாளர் கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்…
“கடைசியாக அவர் ஒருநாள் அவசரமாக என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
“வந்து பார்த்துவிட்டுப் போய்விடுங்கள். அடுத்த மாதம் நான் இல்லாமல் போய்விடலாம்.”
எனக்குப் பதற்றமாக இருந்தது. சென்னையில் இருந்த அவரைப் பார்க்க நான் உடனே போனேன். தளர்ந்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் இனிமையும் சிநேகமும் அவர் முகத்தில் இன்னும் பரவியிருந்தன.
“உங்களையெல்லாம் ஒரு தடவைப் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது. இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லிவிட்டேன். டாக்டராக இருப்பதால் இப்படி ஒரு தொல்லை. என் உடல்நிலை எனக்கே தெரிந்துபோய்விடுகிறது.
என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? எங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள்! என் மனைவி உட்பட! என்ன பிரயோஜனம்? தினப்படி வழக்கமாக என் மனைவி என்னைத் தவறாமல் விடியற்காலம் எழுப்பிவிடுவாள். ‘வாக்கிங் கெளம்புங்கோ!’ என்று உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொள்வாள். சில காலத்துக்குப் பிறகு விடியலில் அவள் உத்தரவு போடாமலேயே அவள் என்னை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றி நானே எழுந்துவிடுவதும் உண்டு!
பத்து வருஷத்துக்கு முந்தி அன்றும் நான் அப்படித்தான் எழுந்து அவளை நன்றாகப் போர்த்திவிட்டு வாக்கிங் போனேன். ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்தேன். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவள் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை.
நானே காபி தயாரித்துக்கொண்டு, கூடத்தில் பேப்பரை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். மணி 9:30 க்கு மேல் ஆகிவிட்டது. அங்கே வந்த என் மகள் ‘ஏன் அம்மாவை எழுப்பவில்லையா… இன்னுமா தூக்கம்?’ என்றாள்.
‘தூங்கட்டுமேடீ… ஏதோ அசதியா இருக்கலாம்’ என்றேன்.
‘நோ… நோ… எழுப்புங்கள் நேரமாகிவிட்டது’ என்று உள்ளே போனாள். நான் உள்ளே போய் அவளை விதவிதமாக எழுப்ப முயன்றேன். அவள் கண் விழிக்கவே இல்லை. கைகள் சில்லிட்டுப்போயிருந்தன. கலக்கமுடன் அவசரமாக இன்னோர் இதய டாக்டரைக் கூட்டிவந்து காண்பித்தோம்.

‘உங்கள் மனைவி இறந்துபோய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது’ என்றார்.
என்னால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவள் காலையிலேயே இறந்துபோய்விட்டாள். இரண்டு மணி நேரமாக மனைவி இறந்ததை உணராமல் நான் காபி குடித்துக் கொண்டு கூடத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு விபரீதமான சோகமா எனக்கு?”
அவர் கண்ணில் ஈரம் துளிர்த்தது. “ஆனா, இப்ப என் விஷயத்தைப் பாருங்கள். என் முடிவு எனக்கு அநேகமாக நிச்சயமாகவே தெரிந்துவிட்டது. மாதம், தேதி, கிழமைகூடச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.
என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாக முடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி என்னுடைய சாவுதான். அப்படி ஒரு ராசி எனக்கு!” என்று சிரிக்க முயன்றார்.
அவருக்கு பலமாக இருமல் வந்துவிட்டது. “நிச்சயம் அடுத்த மாதம் வருவேன். இதே கதையை மீண்டும் என்னிடம் சொல்லி, நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பீர்கள் சார்… வரட்டுமா?” என்று விடை பெற்றேன்.
மூன்று நாள்கள் கழித்து, டிசம்பர் 21, 2015 அந்தச் செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது! என பதிவு செய்துள்ளார்.

யார் யாருக்கோ ஊர் எல்லாம் சிலைகள் வைக்கப்படுள்ளன.வைக்கப்படுகின்றன.பார்க்கவே அருவருப்பாக உணரும் தொழுநோயாளிகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர், எவரிடமும் கட்டணம் என்று எதுவும் வசூலித்ததும் இல்லை…இலக்கியத்திலும் மிக சிறந்தவர், இருந்தும்இவரை எத்தனை தமிழர்களுக்கு இன்று தெரியும்..?காரணம் என்ன..? இவர் உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்பதாலா..?இதுவா சமூகநீதி..?இது சமூக அநீதி அல்லவா..?

(இவரது பிறந்த தினம் நேற்று 7-9-1929.)

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...