மோடியின் கதை கூறும் இணையதளம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபலங்கள், சாமானியர்கள், அவருடன் பயணிப்பவர்கள் என பலரும் பகிர்ந்து கொண்டுள்ள சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிரும் சிறப்பு இணையதளம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு modistory.in என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் பற்றி மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘இதுவரை சொல்லப்படாத, கேட்கப்படாத கதைகள் உள்ளன. ஒரு சிறந்த நபருடனான, அரசியல் ஆளுமையுடனான சந்திப்புகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன’ எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர் அனுராக்தாகூர் உள்ளிட்ட பலரும் இந்த இணையதளம் குறித்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

‘கடைநிலை மனிதனுக்காகா நான்நிற்பது ஏன்? மோடிஸ்டோரி.இன் இணையதளத்தில் டாக்டர் அனில் ராவல் என்பவர் 1980-ல் நரேந்திர மோடியுடன்தான் பயணிக்க நேர்ந்தபோது அவர் சொன்ன ஒரு கதை குறித்துபகிர்ந்துள்ளார். எதற்காக நீங்கள் கடைநிலை மனிதனுக்காக நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு மோடிகூறிய பதிலை அவர் அந்த இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி என்னிடம், “நான் ஒருமுறை ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரதுவீடு ஒரு குடிசை. உள்ளே அவரது மனைவியும் குழந்தையும் இருந்தனர். அவர்கள் எனக்கு பாதி ரொட்டியும், ஒருகிண்ணத்தில் பாலும் கொத்தனர். அந்தப் பாலை குழந்தை ஏக்கத்துடன் பார்த்தது. நான் எனக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் பாதியை சாப்பிட்டுவிட்டு, பாலை வைத்துவிட்டேன். அந்தப்பாலை அந்தக் குழந்தை ஒரேமூச்சில் குடித்தது. அதைப் பார்த்து எனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. அன்று தான் நான் கடைநிலை மனிதரின் வாழ்க்கையை முன்னேற்றப்பாடுபட வேண்டும் என்று முடிவசெய்தேன்” என்றார்.

இவ்வாறாக டாக்டர் அனில்ராவல் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதுபோல் யார் வேண்டுமானாலும் தங்களின் அனுபவங்களைப் பகிரும்வகையில் உங்கள் கதையைப் பதிவு செய்யுங்கள் (Register your Story) என்ற ஆப்ஷன் உள்ளது.

மோடி ஸ்டோரி என்ற இணையதளத்தின் இலச்சினையாக ஒரு தேநீர் கோப்பை வைக்கப்பட்டுள்ளது. தேநீர் நிறத்திலேயே இணையதளத்தின் பிரதான நிறமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...