பெண்களை மதிக்காத வீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘அய்யா… புண்ணிய வான்களே! என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… அதையும்கொஞ்சம் அழகு தமிழில் திட்டுங்கள்…’ என்று கெஞ்சியது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அண்ணாதுரை பெயரில் வழங்கப்பட்ட விருதைபெற்ற நாஞ்சில் சம்பத் என்ற மகானுபாவர், தமிழிசையை பற்றிபேசும் போது, ‘இரு மாநிலங்களுக்கு இப்போது ஒருத்தி கவர்னராக இருக்கிறாள்’ எனக்கூறி, தனக்கே உரிய நரகல்நடையில் விமர்சனம் செய்துள்ளார். ஏன் இப்படி ஒருமையில், தரக்குறைவாகப் பேசினீர்கள் என்று நியாயம் கேட்டதுக்கு, ‘மகாகவி பாரதியாரே, பராசக்தியை பற்றி புகழ்ந்து பாடும்போது, சுடர் மிகும் அறிவோடு என்னைப் படைத்துவிட்டாயடி’ என்று ஒருமையில் தான் பாடி இருக்கிறார். அபிராமிப் பட்டரும், ‘சொல்லடி சிவசக்தி, நில்லடி என் முன்னாலே’ என்று ஒருமையில் தான் பாடியுள்ளார். தெய்வங்களையே வாடி போடி, சொல்லடிநில்லடி என்று புலவர்கள் பாடியிருக்கும் போது,

சாதாரண மனுஷியான கவர்னர் தமிழிசையை, ‘அவள் கவர்னராக இருக்கிறாள்’ என்று ஒருமையில் பேசியதுதவறே அல்ல! இப்படி ஒருமையில் பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி ஓடிஒளிய மாட்டேன்’ என்று, ரொம்ப தெனாவட்டாகப் பதில் சொல்லி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
திராவிட கட்சியினரும், அவர்களின் வழிவந்தவர்களும், பெண்களை கேவலப்படுத்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே, நடிகை பானுமதி பற்றி சட்டசபையில் பேசும் போது, ‘அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல’ என்று எகத்தாளமாகக் கூறினார். திருமணமாகாத ஜெயலலிதாவை, திருமதி ஜெயலலிதா என அழைத்து அசிங்கப்படுத்தினார் கருணாநிதி. அதுமட்டுமா… மதுரையில் தி.மு.க., ரவுடிகளால், முன்னாள் பிரதமர் இந்திரா கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்தம்சிந்திய போது, அம்மையாருக்கு ரத்தம் எங்கேவடிகிறது என்று கேட்டு கேவலப்படுத்தி மகிழ்ந்தவரும் அதே கருணாநிதி தான்.

சட்ட சபையில் கருணாநிதி முன்னிலையில், துச்சாதனனாக மாறி, ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அசிங்கப் படுத்தியவர் தான் தற்போதைய அமைச்சர் துரைமுருகன். ‘அடப்பாவிகளா! என்னைத்திட்டினாலும் பரவாயில்லை… கொஞ்சம் அழகுதமிழில் திட்டுங்கள். அது, எனக்கு காதில்தேனாக வந்து பாயும்’ என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். இதைவிட நாகரிகமாக, நாஞ்சில் சம்பத்தை கண்டனம் செய்யமுடியாது; இனியாவது அவர் திருந்தினால் சரிதான். பெண்களை மதிக்காதவீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

 

நன்றி என்.தொல்காப்பியன்

தினமலர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...