மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த புதுச்சேரி

பிரதமரின் ‘அதிவிரைவு சக்தி’ திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டுகுழுக்கள் ஏற்படுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்ற தேசிய மாஸ்டர்பிளான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்திட்டம் ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத் தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் பிளார்ட் பார்ம்’ துவக்கப்படுகிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுவித்து இருந்தது.இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் தற்போது இணைகிறது. இதற்காக புதுச்சேரி உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப் பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரமளிக் கப்பட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் எட்டுதுறைகளின் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதேபோல், தொழில் வணிகத் துறைசெயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு, தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பேற்று செயல்படும்.மேலும், மாஸ்டர் பிளானுக்கு வெளியே உள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை இந்தகுழு கண்காணிக்கும்.

பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தஇரண்டு குழுக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்தந்துள்ளார்.2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ., வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் கதிசக்தி திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதிசக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.அத்துடன், மாநிலத்திற்கு தனியாக உட்கட்டமைப்பிற்கான மாஸ்டர்பிளானை உருவாக்கி, உயர்மட்ட குழுவான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல்பெற உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்னின்று சமாளிக்கும். விரைவான முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...