மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த புதுச்சேரி

பிரதமரின் ‘அதிவிரைவு சக்தி’ திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டுகுழுக்கள் ஏற்படுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்ற தேசிய மாஸ்டர்பிளான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்திட்டம் ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத் தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் பிளார்ட் பார்ம்’ துவக்கப்படுகிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுவித்து இருந்தது.இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் தற்போது இணைகிறது. இதற்காக புதுச்சேரி உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப் பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரமளிக் கப்பட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் எட்டுதுறைகளின் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதேபோல், தொழில் வணிகத் துறைசெயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு, தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பேற்று செயல்படும்.மேலும், மாஸ்டர் பிளானுக்கு வெளியே உள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை இந்தகுழு கண்காணிக்கும்.

பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தஇரண்டு குழுக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்தந்துள்ளார்.2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ., வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் கதிசக்தி திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதிசக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.அத்துடன், மாநிலத்திற்கு தனியாக உட்கட்டமைப்பிற்கான மாஸ்டர்பிளானை உருவாக்கி, உயர்மட்ட குழுவான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல்பெற உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்னின்று சமாளிக்கும். விரைவான முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...