மக்களிடம் மதவெறி அதிகரித்து விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை

டெல்லியில் கடந்த சனிக் கிழமையன்று நடந்த மத ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் பலர் காயமடைந்தனர்.

இதேபோல, சமீபத்தில் வேறுசில மாநிலங்களிலும் மதமோதல்கள் தொடர்பான செய்திகள்வந்தன. இந்த சம்பவங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் முக்தார்அப்பாஸ் நக்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள், இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தையும் உறுதிப்பாட்டையும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. மக்களிடம் மதவெறி அதிகரித்து விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.

தங்களது நம்பிக்கைகளைப் பின்பற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்கள் என்ன சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்று சொல்வது அரசின் வேலையல்ல. தங்களுக்கு விருப்பமான உணவை உண்ண குடிமக்களுக்கு உரிமைஉள்ளது. ஹிஜாப் அணிவது இந்தியாவில் தடைசெய்யப்பட வில்லை.

ஆனால், ஒரு கல்லூரியில்,நிறுவனத்தில் உடைகட்டுப்பாடுகள் இருந்தால் அங்கு சேருவோர் அதை பின்பற்றவேண்டும். விருப்பமில்லா விட்டால் வேறு இடங்களில் சேரலாம்.

இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...