டெல்லியில் கடந்த சனிக் கிழமையன்று நடந்த மத ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் பலர் காயமடைந்தனர்.
இதேபோல, சமீபத்தில் வேறுசில மாநிலங்களிலும் மதமோதல்கள் தொடர்பான செய்திகள்வந்தன. இந்த சம்பவங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் முக்தார்அப்பாஸ் நக்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள், இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தையும் உறுதிப்பாட்டையும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. மக்களிடம் மதவெறி அதிகரித்து விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.
தங்களது நம்பிக்கைகளைப் பின்பற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்கள் என்ன சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்று சொல்வது அரசின் வேலையல்ல. தங்களுக்கு விருப்பமான உணவை உண்ண குடிமக்களுக்கு உரிமைஉள்ளது. ஹிஜாப் அணிவது இந்தியாவில் தடைசெய்யப்பட வில்லை.
ஆனால், ஒரு கல்லூரியில்,நிறுவனத்தில் உடைகட்டுப்பாடுகள் இருந்தால் அங்கு சேருவோர் அதை பின்பற்றவேண்டும். விருப்பமில்லா விட்டால் வேறு இடங்களில் சேரலாம்.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |