இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை

சீக்கியகுரு ஸ்ரீ குரு தேக்பகதூரின் 400-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையில் சிறப்புநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, “செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் புனிதகுருத்வார், நமது பண்பாட்டைப் பாதுகாக்க குரு தேக்பகதூர் ஜி எவ்வளவு பெரிய தியாகம் செய்தார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்போது நாட்டில் மதவெறி புயல்வீசியது. மதத்தை தத்துவம், அறிவியல், சுயசிந்தனை என்று கருதக்கூடிய நம் இந்தியா, மதத்தின் பெயரால் வன்முறை மற்றும் பல அட்டூழிய ங்களைச் செய்தவர்களை எதிர்கொள்கிறது.

பெரியபெரிய சக்திகளெல்லாம் மறைந்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் அழியாமல் நிலைத்துநின்று, முன்னேறுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிறசமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும்கூட நாம் இந்த முழுஉலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்” எனக் கூறினார்.

உலகவரலாற்றில் மதம், மனிதவிழுமியங்கள், லட்சியங்கள், கொள்கைகளைப் பாதுகாக்க தன் உயிரைத் தியாகம் செய்த ஒன்பதாவது சீக்கியகுருவாக குரு தேக்பகதூர் அறியப்படுகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...