21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்

இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சோதனைக்கருவி, தொலைத் தொடர்புத் துறையில் நவீனதொழில்நுட்பம் மற்றும் தற்சார்பில் முக்கியத்துவத்தை நோக்கிய ஒருமுக்கிய நடவடிக்கை. “நாட்டின் சொந்த 5ஜி தரம், 5ஜிஐ என்றவடிவில் உருவாக்கப்பட்டுள்ளது, இதுநாட்டுக்கு பெரும்மதிப்பு அளிக்கும் விஷயமாகும். நாட்டின் கிராமங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டுசெல்வதில் பெரும் பங்காற்றும்”

21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் வளர்ச்சியின்வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும், இதற்கு ஒவ்வொரு மட்டத்திலும் தொடர்பு நவீனமய மாக்கப்பட வேண்டும் என்றார். நாட்டின் ஆளுகை, எளிதாக வாழுதல், எளிதாக வர்த்தகம்புரிதல், ஆகியவற்றில் ஆக்கப் பூர்வமான மாற்றங்களை 5ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப் போகிறது. இது வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது ஏராளமான வேலைவாய்ப்புகளையும், வசதிகளையும் அதிகரிக்கும். 5ஜி-யை வேகமாக பிரபலப்படுத்த அரசு மற்றும் தொழில் துறையின் முயற்சிகள் தேவைப்படுகிறது.

தற்சார்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவை சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் எத்தகைய பன்னோக்குப் பயனை உருவாக்கும் என்பதற்கு தொலைதொடர்புத் துறை பெரும் உதாரணம். 2-ஜி யுகத்தின் விரக்தி, ஏமாற்றம், ஊழல், கொள்கை முடக்கம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்து நாடு, 3ஜி, 4ஜி, தற்போது 5ஜி மற்றும் 6ஜி-யை நோக்கி வேகமாக முன்னேறிவருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், அடைதல், சீர்திருத்தம், ஒழுங்குப் படுத்துதல், விடையளித்தல், புரட்சிகரப்படுத்துதல் ஆகிய பஞ்சாமிர்தத்துடன் தொலை தொடர்புத் துறையின் புதிய ஆற்றல் ஊக்குவிப் பட்டுள்ளது. சென்றவற்றை நினைப்பதை கைவிட்டு, நாடு தற்போது அரசின் அணுகு முறையுடன் முன்னேறி செல்கிறது. இன்று தொலைத்தொடர்பு மற்றும் இணையதள பயன்பாடு விஷயத்தில் உலகிலேயே மிகவேகமாக முன்னேறும் வகையில் நாட்டில் இதனை விரிவுப்படுத்தி வருகிறோம். இதில், தொலைத் தொடர்புத்துறை உட்பட பலதுறைகள் முக்கிய பங்காற்றியுள்ளது.

இன்று பரம ஏழை குடும்பங்களிலும் செல் பேசி சென்றடைந்துள்ளதை உறுதி செய்துள்ளோம் , இதற்கு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்ததேகாரணம் . முன்பு இரண்டு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தநிலையில் தற்போது இது 200-ஆக அதிகரித்துள்ளது .

இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருகிராமத்தையும் கண்ணாடி இழை இணைத்துள்ளது . 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 100 கிராம ஊராட்சிகளில்கூட இந்தவசதி இருக்கவில்லை . தற்போது 1.75 லட்சம் கிராம ஊராட்சிகளில் அகண்ட அலைவரிசை இணைப்பை நாம் செய்திருக்கிறோம். இதன்பயனாக நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைந்து வருகிறது.

நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்க, அரசின் முழு அணுகுமுறையும் ட்ராய் போன்ற ஒழுங்கு முறை நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம். “இன்று ஒழுங்கு முறை என்பது ஒருதுறை எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பல்வேறு துறைகளை தொழில்நுட்பம் இணைத்துள்ளது. அதனால்தான் இன்று ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதற்கு அனைத்து ஒழுங்கு முறை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து பொதுவான தளங்களை உருவாக்கி சிறந்த ஒருங்கிணைப்புக்கான தீர்வுகளைகண்டறிவது அவசியமாகும்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...