அன்னையின் 100வது பிறந்தநாளை ஒட்டி பாத பூஜை செய்து ஆசி பெற்ற மோடி

தனது அன்னையின் 100வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில்சந்தித்து அவருக்கு பாத பூஜை செய்து, மாலை அணிவித்து ஆசிர்வாதம்பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி இன்று தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1923 ஜூன் 18ல் அவர் பிறந்தார். அவரது பிறந்தநாளை ஒட்டி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்குச்சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு மாலை அணிவித்து காலைத்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். முன்னதாக தாயுடன் பூஜை செய்துவிட்டு. பின்னர் அவர் பாதங்களைக்கழுவி பாதை பூஜை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக்கொண்டார். பின்னர், அவருக்கு மாலையும், ஷால்வையும் அணிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். கூடவே அவர், என் தாய்வீட்டுச் செலவை சமாளிக்க நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்த்தார். ராட்டை சுற்றுவார். பருத்திபரிப்பார். நூல் நூற்பது தொடங்கி வீட்டுவேலை வரை எங்களைக் காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்தார். வலிமிகுந்த வேலைகளுக்கு இடையேயும் கூட பருத்திமுள் எங்களைக் குத்திவிடக் கூடாது என வீட்டை சுத்தம் செய்வார். ஒருவேளை என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்தஆண்டு நூற்றாண்டு பிறந்தநாளை எட்டியிருப்பார் என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் பிறந்தநாளை ஒட்டி புரி ஜகநாதர் கோயிலில் சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

தாயாரை சந்தித்தபின்னர் பிரதமர் மோடி பஞ்சமால் மாவட்டத்தில் உள்ள புனித தலமான பாவகத்திற்குச் செல்கிறார். பின்னர் குஜராத்கவுரவ் அபியான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். வதோதராவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ரூ.16,369 கோடி மதிப்பிலான 18 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார். தேசிய ரயில் போக்குவரத்து மையத்திற்கு புதியகட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இந்த கட்டிடம் ரூ.5,620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப் படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...