‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல

கடந்த ஜூன் 18-ம்தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு பாதபூஜை செய்து வணங்கினார். அதோடு தாயின் வாழ்க்கை குறித்த நினைவலைகளை வலைப்பதிவில் வெளியிட்டார். அதன் சாரம்சம் வருமாறு:

‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தைஅல்ல. அன்பு, பொறுமை,நம்பிக்கை என அந்த வார்த்தைக்கு ஆயிரம்அர்த்தங்கள் உள்ளன. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் குணநலன்கள், தன்னம்பிக்கையை செதுக்கிவளர்க்கிறார். பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார்.

எல்லா தாய்மார்களையும்போல எனது தாயும் மிகவும் எளிமையானவர், அற்புதமானவர். குஜராத்தின் வட்நகரில் மண் சுவர், ஓடு வேய்ந்த ஒற்றை அறைகொண்ட சிறிய வீட்டில் நாங்கள் வசித்தோம். அந்த வீட்டில் கழிப்பறை, குளியல்அறை கிடையாது.

வீட்டை ஒட்டி மூங்கிலால் ஒருபரணை எனது தந்தை அமைத்தார். அதுதான் எங்களது சமையல் அறை. அந்தபரணில் ஏறி எனது தாய் சமையல் செய்வார்.ஒருபோதும் அவர் உணவு வகைகளை வீணாக்க மாட்டார்.

எனது தந்தை வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனைசெய்தார். நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு அவர் பணிக்குச்செல்வார். அப்போதே எனது தாயும் எழுந்துவிடுவார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் ஒருவரேசெய்வார். வீட்டுச் செலவுகளை சமாளிக்க அண்டைவீடுகளில் பாத்திரங்களை கழுவினார். அதோடு ராட்டையில் நூல் நூற்றார்.

மழைக்காலத்தில் எங்கள் வீட்டின் கூரைஒழுகும். அப்போதுஎனது தாய் வாளிகள், பாத்திரங்களில் மழைநீரை சேகரிப்பார். அந்த தண்ணீரை அடுத்த சிலநாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார். அப்போதே அவர்மழைநீரை சேகரித்தார். எனது தாய் எப்போதுமே தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பார். பசு சாணத்தால் வீட்டை மெழுகி சுத்தமாக வைத்திருப்பார். மண் சுவரில் கண்ணாடி துண்டுகளை பதித்தும் ஓவியங்களை வரைந்தும் வீட்டை அழகு படுத்துவார்.

எனது தாய் பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை. அவர் தங்க நகைகளை அணியவில்லை, நான்வீட்டை விட்டுவெளியேற முடிவுசெய்தபோது, “உன் மனம் சொன்னபடி செய்” என்று ஆசிர் வதித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக தாயை சந்தித்து ஆசிபெற சென்றேன்.

அப்போது அவர், ‘‘உன்னுடைய அரசு பணி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நீ ஒருபோதும் லஞ்சம் வாங்காதே’’ என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தொலைபேசியில் பேசும்போதெல்லாம், ‘‘எந்தத்தவறும் செய்யாதே, ஏழைகளுக் காக உழைத்துக்கொண்டே இரு” என்று அன்பு கட்டளையிட்டார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...