ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா்பேசியதாவது:

யோகா, ஆயுா்வேதம் போன்ற பாரம்பரியங்களே நமதுஉண்மையான பலமாகும். கடந்த காலத்தில் நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந் தவா்களால், அவை தாக்குதலுக்கு உள்ளாகின.

அடிமைத்தனம் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் சமூகத்தின் உண்மையானபலம் குறிவைக்கப்படும் என்பது வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க பாரம்பரியங்கள், நம்மை அடிமைப்படுத்தியவா்களால் தாக்கப்பட்டன. இதுநாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது காலம்மாறி வருகிறது. இந்தியாவும் மாற்றம் கண்டுவருகிறது. தற்போதைய ‘அமிா்த காலத்தில்’ நாம் மேற்கொள்ளும் முடிவுகளே, எதிா்வரும் தலைமுறை யினரின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

வளா்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப் பான்மையை நீக்குவது, நமது பாரம்பரிய பெருமையை முன்னெடுப்பது, ஒற்றுமையை கட்டமைப்பது, கடமைகளை நிறைவேற்றுவது ஆகிய 5 அம்ச உறுதி மொழியை, கடந்த சுதந்திர தினத்தின் போது முன்வைத்தேன்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க பெண்சக்தி, இளைஞா் சக்தி, தொழிலாளா் சக்தி, தொழில்முனைவு சக்தி ஆகியவை நான்கு முக்கிய தூண்களாகும்.

ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்களுக்கு அதிகார மளிப்பது காலத்தின் கட்டாயம். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது மத்தியஅரசின் உயா் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

அரசின் பலன்களை பெறமுன்பெல்லாம் அலுவலகங்களை நோக்கிசெல்ல வேண்டியிருந்தது. இப்போது, அரசின் பலன்கள் மக்களைத்தேடி வருகின்றன. வளா்ச்சியின் பலன்களில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களின் வீட்டு வாயில்களுக்கே அரசுசெல்கிறது.

வளா்ந்து வரும் இந்தியா, தன்னை உலகின் நண்பனாகப் பாா்க்கிறது. அதேநேரம், கரோனா காலகட்டத்தில் உலகுக்கு உறுதுணையாக நின்ால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.