ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா்பேசியதாவது:

யோகா, ஆயுா்வேதம் போன்ற பாரம்பரியங்களே நமதுஉண்மையான பலமாகும். கடந்த காலத்தில் நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந் தவா்களால், அவை தாக்குதலுக்கு உள்ளாகின.

அடிமைத்தனம் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் சமூகத்தின் உண்மையானபலம் குறிவைக்கப்படும் என்பது வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க பாரம்பரியங்கள், நம்மை அடிமைப்படுத்தியவா்களால் தாக்கப்பட்டன. இதுநாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது காலம்மாறி வருகிறது. இந்தியாவும் மாற்றம் கண்டுவருகிறது. தற்போதைய ‘அமிா்த காலத்தில்’ நாம் மேற்கொள்ளும் முடிவுகளே, எதிா்வரும் தலைமுறை யினரின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

வளா்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப் பான்மையை நீக்குவது, நமது பாரம்பரிய பெருமையை முன்னெடுப்பது, ஒற்றுமையை கட்டமைப்பது, கடமைகளை நிறைவேற்றுவது ஆகிய 5 அம்ச உறுதி மொழியை, கடந்த சுதந்திர தினத்தின் போது முன்வைத்தேன்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க பெண்சக்தி, இளைஞா் சக்தி, தொழிலாளா் சக்தி, தொழில்முனைவு சக்தி ஆகியவை நான்கு முக்கிய தூண்களாகும்.

ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்களுக்கு அதிகார மளிப்பது காலத்தின் கட்டாயம். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது மத்தியஅரசின் உயா் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

அரசின் பலன்களை பெறமுன்பெல்லாம் அலுவலகங்களை நோக்கிசெல்ல வேண்டியிருந்தது. இப்போது, அரசின் பலன்கள் மக்களைத்தேடி வருகின்றன. வளா்ச்சியின் பலன்களில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களின் வீட்டு வாயில்களுக்கே அரசுசெல்கிறது.

வளா்ந்து வரும் இந்தியா, தன்னை உலகின் நண்பனாகப் பாா்க்கிறது. அதேநேரம், கரோனா காலகட்டத்தில் உலகுக்கு உறுதுணையாக நின்ால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...