ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் ஆபத்தானது

வாக்குகளைப் பெறுவதற்காக இலவச பொருள்களை வழங்கும்கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இலவசப் பொருள்களை குறிப்பதற்காக பிரதமர் வடஇந்தியாவில் பண்டிகை காலங்களில் பரிமாறி கொள்ளப்படும் ரேவடி எனப்படும் ஒருவகை இனிப்பினை அரசியல் கட்சிகளால் கொடுக்கப் படும் இலவச பொருள்களுக்கு உருவகமாகக் கூறினார். ஆட்சியினைப்பிடிக்கும் நோக்கில் இதுபோன்று இலவசங்களை வழங்கும் கட்சிகளிடமிருந்து மக்கள் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இந்த இலவச கலாசாரத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் பந்தேல்கண்டில் அமைக்கப் பட்டுள்ள விரைவுச்சாலையை திறந்து வைத்துப்பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். இந்த பந்தேல்கண்ட் விரைவுச் சாலை சுமார் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையினால் பயண வேகம் மட்டுமின்றி தொழிற்சாலையின் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும்.

பந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ இந்த புதிய விரைவுச் சாலையின் மூலம் உத்தரப் பிரதேசம் முன்பு சந்தித்துவந்த சாலை இணைப்பு பிரச்னைகள் முடிவுக்குவரும். இந்த புதிய சாலையின் மூலம் பயண நேரம் 3-லிருந்து 4 மணி நேரம் குறையும். உத்தரப்பிரதேசம் இரட்டை என்ஜின் ஆட்சியின் மூலம் பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்துவருகிறது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் மற்றும் முடிவுக்கு பின்னும் நாட்டின் வளர்ச்சியினை அதிகரிப்பதே நோக்கமாக இருக்கவேண்டும். நாட்டிற்கு வளர்ச்சிக்கு தீங்கினைத்தரும் விஷயங்கள் நீக்கப்பட வேண்டும். நாட்டினை வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை விட்டுவிட கூடாது. இந்த சகாப்தத்திலேயே நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்ய வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும். ஆனால், புதிய இந்தியாவிற்கு ஒருசவாலும் உள்ளது. அந்த சவால் இந்த தலைமுறைக்கு தீங்கினைத் தரக்கூடியது. உங்களது நிகழ் காலம் உங்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளும் அச்சம் உள்ளது. அதனால், நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

நமது நாட்டில் இன்று வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் பின்பற்றப் படுகிறது. இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் இனிப்புகளை வழங்குவதுபோல இருக்கும். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இலவசபொருள்கள் வழங்கும் கலாசாரம் மிகவும் ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியது. இந்த கலாசாரத்திற்கு எதிராக மக்கள் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, இந்த இலவச பொருள்கள் கலாசாரத்திலிருந்து இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இது போன்று இலவசங்கள் வழங்குபவர்களால் ஒரு போதும் விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அரசியலில் இலவங்கள் வழங்கும் கலாசாரத்தை முழுவதுமாக நீக்கவேண்டும்.

நாங்கள் இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தைவிடுத்து நாட்டின் வளர்ச்சிக்காக பாலங்கள், விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் அமைத்துவருகிறோம். மக்களின் நலனையும் நாங்கள் பாதுகாத்துவருகிறோம். மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியினையும் தீவிரமாக செயல்படுத்திவருகிறோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும்மோசமான நிலையில் இருந்தது. மாநிலம் இரட்டை என்ஜின் ஆட்சியின் கீழ் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...