ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் ஆபத்தானது

வாக்குகளைப் பெறுவதற்காக இலவச பொருள்களை வழங்கும்கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இலவசப் பொருள்களை குறிப்பதற்காக பிரதமர் வடஇந்தியாவில் பண்டிகை காலங்களில் பரிமாறி கொள்ளப்படும் ரேவடி எனப்படும் ஒருவகை இனிப்பினை அரசியல் கட்சிகளால் கொடுக்கப் படும் இலவச பொருள்களுக்கு உருவகமாகக் கூறினார். ஆட்சியினைப்பிடிக்கும் நோக்கில் இதுபோன்று இலவசங்களை வழங்கும் கட்சிகளிடமிருந்து மக்கள் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இந்த இலவச கலாசாரத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் பந்தேல்கண்டில் அமைக்கப் பட்டுள்ள விரைவுச்சாலையை திறந்து வைத்துப்பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். இந்த பந்தேல்கண்ட் விரைவுச் சாலை சுமார் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையினால் பயண வேகம் மட்டுமின்றி தொழிற்சாலையின் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும்.

பந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ இந்த புதிய விரைவுச் சாலையின் மூலம் உத்தரப் பிரதேசம் முன்பு சந்தித்துவந்த சாலை இணைப்பு பிரச்னைகள் முடிவுக்குவரும். இந்த புதிய சாலையின் மூலம் பயண நேரம் 3-லிருந்து 4 மணி நேரம் குறையும். உத்தரப்பிரதேசம் இரட்டை என்ஜின் ஆட்சியின் மூலம் பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்துவருகிறது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் மற்றும் முடிவுக்கு பின்னும் நாட்டின் வளர்ச்சியினை அதிகரிப்பதே நோக்கமாக இருக்கவேண்டும். நாட்டிற்கு வளர்ச்சிக்கு தீங்கினைத்தரும் விஷயங்கள் நீக்கப்பட வேண்டும். நாட்டினை வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை விட்டுவிட கூடாது. இந்த சகாப்தத்திலேயே நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்ய வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும். ஆனால், புதிய இந்தியாவிற்கு ஒருசவாலும் உள்ளது. அந்த சவால் இந்த தலைமுறைக்கு தீங்கினைத் தரக்கூடியது. உங்களது நிகழ் காலம் உங்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளும் அச்சம் உள்ளது. அதனால், நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

நமது நாட்டில் இன்று வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் பின்பற்றப் படுகிறது. இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் இனிப்புகளை வழங்குவதுபோல இருக்கும். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இலவசபொருள்கள் வழங்கும் கலாசாரம் மிகவும் ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியது. இந்த கலாசாரத்திற்கு எதிராக மக்கள் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, இந்த இலவச பொருள்கள் கலாசாரத்திலிருந்து இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இது போன்று இலவசங்கள் வழங்குபவர்களால் ஒரு போதும் விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அரசியலில் இலவங்கள் வழங்கும் கலாசாரத்தை முழுவதுமாக நீக்கவேண்டும்.

நாங்கள் இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தைவிடுத்து நாட்டின் வளர்ச்சிக்காக பாலங்கள், விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் அமைத்துவருகிறோம். மக்களின் நலனையும் நாங்கள் பாதுகாத்துவருகிறோம். மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியினையும் தீவிரமாக செயல்படுத்திவருகிறோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும்மோசமான நிலையில் இருந்தது. மாநிலம் இரட்டை என்ஜின் ஆட்சியின் கீழ் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...