மிகப்பெரிய வாய்ப்பின் தருணமாகவே நான் இதைக் காண்கிறேன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் பற்றி ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். எனவே, இன்று, வெற்றியின் தினம் மட்டுமல்ல, விருப்பங்களின் நாளும்கூட. நம் இளைஞர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் இது ஓர் சிறப்பான தினம். நீங்கள்தான் நாளைய தலைவர்களை உருவாக்கும் தேச கட்டமைப்பாளர்கள். ஏராளமான பிரிவு மாணவர்கள் கல்விபயின்று, வெளியேறியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். எனினும் ஒவ்வொரு பிரிவினரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. தங்களுக்கு உரித்தான நினைவுகளை அவர்கள் விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, இன்று பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்கள் குழந்தையின் வெற்றியில் உங்கள் தியாகங்கள் முக்கியபங்கு வகிக்கின்றன. நமது இளைஞர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக சென்னை என்ற துடிப்பான நகரில் இன்று நாம் குழுமியுள்ளோம்.

125 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 1897 இல் மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் சுவாமி விவேகானந்தர் பேசினார். எதிர்கால இந்தியாவிற்கு அவரதுதிட்டங்கள் பற்றி கேட்கப்பட்டது. “எனது நம்பிக்கை, இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவர்களிலிருந்து என் பணியாளர்கள் உருவாவார்கள். சிங்கங்களை போல, ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வுகாண்பார்கள்”, என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன. ஆனால் இந்தமுறை, தனது இளைஞர்களின் மீது இந்தியாமட்டுமே நம்பிக்கை கொள்ளவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையுடன் நோக்குகின்றன. ஏனென்றால் நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி சக்திகள், இந்தியாதான் உலகின் வளர்ச்சி இயந்திரம்.

இது மிகப்பெரிய கௌரவம். இது மாபெரும் பொறுப்பும் கூட. இதில் நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நண்பர்களே,

நம் இளைஞர்களிடையே நம்பிக்கை பற்றி பேசும் போது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நாம் எவ்வாறு மறக்கமுடியும். அண்ணா பல்கலைக்கழகத்துடன் டாக்டர் கலாம் மிகநெருக்கமாக இருந்தார் என்பது, இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெருமிதம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் தங்கியிருந்த அறை, நினைவகமாக மாறியிருப்பதாக அறிகிறேன் . அவரின் சிந்தனைகளும், மாண்புகளும் நம் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டட்டும்.

நண்பர்களே,

பிரத்தியேகமான தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காலம் என்றும் சிலர் இதை அழைக்கக்கூடும். ஆனால் மிகப்பெரிய வாய்ப்பின் தருணமாகவே நான் இதைக் காண்கிறேன். கொவிட்- 19 பெருந்தொற்று, முன் எப்போதும் இல்லாத, எதிர்பாராத நிகழ்வு. ஒருவரும் அறிந்திராத, நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக்கூடிய நெருக்கடியாக அதுஇருந்தது. ஒவ்வொரு நாடும் இந்தசவாலை எதிர்கொண்டது. நமது ஆற்றலை நெருக்கடிகள்தான் வெளிக்கொணருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். விஞ்ஞானிகள், மருத்துவவல்லுநர்கள் மற்றும் சாமானிய மக்களால், நம்பிக்கையுடன் இந்தியா இந்தநிலையை எதிர்கொண்டது. அதன் விளைவாக இன்று இந்தியாவில் உள்ள அனைத்து துறையும் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றன.

தொழில்துறையாக இருந்தாலும், புதுமை கண்டுபிடிப்பாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும் அல்லது சர்வதேச வர்த்தகமாக இருந்தாலும் இந்தியாதான் முன்னணியில் உள்ளது. நமது தொழில்துறை புத்தெழுச்சி பெற்றுள்ளது. உதாரணமாக, மின்னணு பொருட்கள் உற்பத்தியை குறிப்பிடலாம். கடந்தஆண்டு உலகின் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது. புதுமை கண்டுபிடிப்பு நமது வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக மாறியுள்ளது. கடந்த ஆறே ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. ஆமாம், நீங்கள் கேள்விப் பட்டது சரிதான், 15 ஆயிரம் சதவீதம்தான். 2016-ல் வெறும் 470 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 73,000 ஆக உயர்ந்துள்ளது! தொழில் துறையும் புதுமை கண்டுபிடிப்புகளும் சிறப்பாக செயல்பட்டால் முதலீடுகள் குவியும். கடந்த ஆண்டு இந்தியா சாதனை அளவாக 83 பில்லியன் டாலர் அந்நியநேரடி முதலீடுகளை பெற்றுள்ளது. பெருந்தொற்று பாதிப்புக்குபிறகு நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெருமளவு நிதியைப் பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை இது வரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகம் நெருக்கடியான தருணத்தில் இருந்த போது, நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். மேற்கே ஐக்கியஅரபு அமீரகத்துடனும், கிழக்கே ஆஸ்திரேலியாவுடனும் அண்மையில் வர்த்தக ஒப்பந்தங்களில் நாம் கையெழுத் திட்டுள்ளோம். சர்வதேச விநியோக சங்கிலியில் வலுவான ஒருஇணைப்பாக இந்தியா மாறியுள்ளது. இந்தியா தற்போது தடைகளை வாய்ப்புகளாக மாற்றி வரும் சூழலை பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

நண்பர்களே,

உங்களில் பெரும்பாலானோர் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் தொடர்பான பாடப்பிரிவுகளை படித்தவர்களாவீர். இந்ததொழில்நுட்பம் சார்ந்த இடையூறுகள் மிகுந்த இந்த யுகத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. முதல்அம்சம், தொழில்நுட்ப தாகமாகும். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் சொகுசாக இருக்கலாம் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. பரம ஏழைகளும்கூட இதற்கு ஏற்ப மாறிவிட்டனர். விவசாயிகள் தங்களுக்கு தேவையான சந்தை விவரங்கள், தட்பவெப்பநிலை மற்றும் விலைவாசி பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள செல்போன் செயலிகளை பயன் படுத்துகின்றனர். வீட்டுவேலைகளை கவனிப்போரும் தங்களது வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் விதமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்விபயில்கின்றனர். சிறு வணிகர்களும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். நீங்கள் அவர்களிடம் ரொக்கமாக கொடுத்தால், அவர்களில் சிலர், டிஜிட்டல் முறையில் பணம்செலுத்தக் கூறுகின்றனர். டிஜிட்டல் பணப்பட்டுவாடா மற்றும் நிதித் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது. உங்களது வித்தைகளை காட்டுவதற்கு புதுமை தொழில் நுட்பங்களுக்கு பெருமளவு சந்தைவாய்ப்பு காத்திருக்கிறது.

இரண்டாவது அம்சம், சிரத்தை எடுத்து செய்வோர் மீதுநம்பிக்கை அதிகரித்துள்ளது. முன்பு, சமூக நிகழ்வுகளின் போது, ஒருஇளைஞர் தாம் ஒரு தொழில் முனைவோர் என்று சொல்வது சிரமமானதாகும். மக்கள் அத்தகையோரிடம், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும்வகையில் நிலைத்தன்மை பெற்றுவிடு, அதாவது சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற்றுவிடு என்று கூறுவது வழக்கமாக இருந்தது. தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. உனது சொந்த முயற்சியில் ஏதாவது தொழில்தொடங்க முயற்சித்தாயா என்று கேட்கின்றனர்! ஒருவர், ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஸ்டார்ட் அப்களை தொடங்குவது எளிதானதாகத் தெரிகிறது. சிரத்தை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், அதற்குகாரணம் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று நீங்களாக சிரத்தை எடுப்பது. அல்லது மற்றவர்கள் உருவாக்கிய வாய்ப்புகளை நீங்கள் பயன் படுத்திக் கொள்வதாகும்.

மூன்றாவது அம்சம், சீர்திருத்தங்களுக்கான மனோபாவமாகும். இதற்கு முன்பு, வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்துவது என்பதே பொருளாக இருந்தது. ஆனால், நாம் இதனை மாற்றியுள்ளோம். வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் அல்லது அனைவரையும் கட்டுப்படுத்துவதல்ல, குறுக்கிடத்தூண்டும் அமைப்பு முறையை கட்டுப்படுத்துகிறது. வலுவான அரசாங்கம் என்பது கட்டுப்படுத்துவதல்ல, மாறாக பொறுப்பாக செயல் படுவதாகும். வலுவான அரசாங்கம் என்பது அனைத்து அம்சங்களிலும் தலையிடுவதாகாது. அது தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு மக்களின் திறமைகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது. வலுவான அரசாங்கத்தின் வலிமை, தான் அறியாததை ஏற்றுக்கொள்ளும் எளிமை அல்லது அனைத்தையும் மேற்கொள்வதில்தான் உள்ளது. எனவேதான், மக்கள் மற்றும் அவர்களது சுதந்திரத்திற்கு அதிகஇடம் அளிக்கும் சீர்திருத்தங்கள் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் காணமுடிகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ந்து வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க இளைஞர்களுக்கு அதிக சுதந்திரத்தை உறுதிசெய்கிறது. ஏறக்குறைய 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை ஒழித்தது வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது.

பங்குகள் வழியிலான மூலதன வரி நீக்கம், / முன் தேதியிட்ட வரி நீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு ஆகியவை முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

ட்ரோன்கள், விண்வெளி மற்றும் புவியியல் துறைகளில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் இந்ததுறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

பிரதமரின் விரைவுசக்தி என்ற பெரும் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அதிவேகத்திலும் அதிக அளவிலும் உருவாக்குகின்றன.

தொழில்நுட்பத்தின் மீது ரசனை, துணிவுமிக்க மீது நம்பிக்கை மற்றும் சீர்திருத்தத்திற்கான மனோபாவம் இப்போது உள்ளது. இந்த காரணிகள் அனைத்தும் உங்களுக்காக ஒருதளத்தை உருவாக்குகின்றன, அங்கு வாய்ப்புகள் உருவாக்கப் படுகின்றன, அந்த வாய்ப்புகள் நிலையானவையாக இருக்கின்றன, அந்தவாய்ப்புகள் இன்று பெருகி வருகின்றன.

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகள் உங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் முக்கிய மானவை. இது சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய அமிர்தகாலமாகும்.

உங்களைப் போன்ற பலஇளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர் காலத்தையும் உருவாக்குவது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். எனவே, உங்கள் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்கள்கற்றல் இந்தியாவின் கற்றல். உங்கள்வெற்றி இந்தியாவின் வெற்றி. எனவே, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள் திட்டங்களைத் தீட்டும்போது… இந்தியாவிற்கும் நீங்கள் தானாகவே திட்டங்களைத் தீட்டுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுறைக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல் படுங்கள்!

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...