மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து இருப்பதாக, விமானத்தில் பறந்த பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.

பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில், நேற்று நான்காவது நாள் நடந்த விமான கண்காட்சியில், பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா பங்கேற்றார். இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம் ஹெச்.டி.டி. – 40ல் துணை பைலட்டாக பயணம் செய்து அசத்தினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

ஹெச்.டி.டி. – 40 பயிற்சி விமானம், நமது நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் தயாரிக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டு சார்புநிலையை தவிர்த்து நமது சுயசார்பு என்ற நிலையை குறிக்கிறது. கடந்த 2012 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில், இந்தியா சுவிஸ் பிலாட்டஸ் பயிற்சி விமானங்களை வாங்கியது. ஆனால் அதன் கொள்முதலில் நிறைய முறைகேடு இருந்தது.

இதுபற்றி கடந்த 2019ல் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பிலாட்டஸ் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவிற்கு உள்நாட்டு பயிற்சி விமானத்தின் அவசர தேவை ஏற்பட்டது.

அந்த சவாலான காலகட்டத்தில் ஹெச்.ஏ.எல்., நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஹெச்.டி.டி. – 40 விமானத்தை வடிவமைத்தது.

அப்போது திட்டம் மீண்டும், மீண்டும் பின்னடைவை சந்தித்தாலும், பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆதரவுடன் இந்த திட்டம் உயிர் பெற்றது.

இந்த விமானத்தில் பறந்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. சரியான கொள்கை, ஆதரவு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நமது விஞ்ஞானிகள் எடுத்து காட்டி உள்ளனர். இந்த சாதனை மறைந்த மனோகர் பாரிக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்து உள்ளது.

ஹெச்.ஏ.எல்., தலைமை வடிவமைப்பாளர்கள் சுமா பிரகாஷ், ராமானந்த் இல்லாமல் ஹெச்.டி.டி. – 40 வெற்றி சாத்தியம் இல்லை. அவர்களுக்கும், குழுவினருக்கும் நன்றி. விண்வெளி தொழில்நுட்பத்தில் நமது நாடு உலகளாவிய தலைவராக வளர்ந்து வருகிறது. பல நாடுகள் விரைவில் ஹெச்.ஏ.எல்., தயாரிப்பு விமானங்களை வாங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...