தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மை யினருக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செயல் படுத்தவில்லை,” என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசியசெயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒருபகுதியாக, நேற்று கோவைவந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன்கருதி, பா.ஜ., அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார்.
மேலும் கூறியதாவது:சிறுபான்மை மக்களை பா.ஜ., கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன், கோவைவந்துள்ளேன். தற்போது 20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இம்மாத இறுதியில் நடக்கும்விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர்.தமிழகத்தில் கஞ்சாவிற்பனை தொடர்ந்து நடக்கிறது. பாலியல் கொடுமைகள் இந்தஆட்சியில் அதிகரித்துள்ளன.
தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்தியஅரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. பிரதமர் மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |