கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 4 ஆயிரம் கோடி ரூபாய் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சோன்மார்க்- கேதார்நாத் பயண நேரம், வெறும் 36 நிமிடங்களாக குறையும்.
டில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி அரசு எடுத்த முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு விளக்கினார்.
அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ஆகிய இரு ரோப் கார் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ரூ.6,800 கோடிக்கு மேல் செலவாகும்.
12.9 கி.மீ., நீளம் கொண்ட சோன்மார்க்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு ரூ.4,081 கோடிக்கும் மேல் செலவாகும். தற்போது இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ரோப் வே அமைக்கப்பட்டால், பக்தர்கள் வெறும் 36 நிமிடங்களில் கேதார்நாத் சென்று விட முடியும்.
12.4 கி.மீ ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே திட்டத்திற்கு ரூ.2,730 கோடி செலவாகும்.
இரண்டு திட்டங்களும் பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக இருக்கும்.
இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் நிபுணர்களின் உதவியுடன் முடிக்கப்படும்.
இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |