யுக யுகத்திற்க்கான பாரதம் என்ற அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு சான்றாக அமையும்- கஜேந்திர சிங் ஷெகாவத் பேச்சு

சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக தில்லி வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கில் கட்டப்படவுள்ள யுக யுகத்திற்கான பாரதம் என்ற  அருங்காட்சியம் தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான  ஆலோசனை மற்றும் திறன்கட்டமைப்பு பயிலரங்கத்தைக் கலாச்சாரஅமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிலரங்கம் 2024 ஜூன் 26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

நிறைவுநாளான நேற்று  (29.06.2024) மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தற்குச் சான்றாக நிலைத்துநிற்கும் என்றார். இது அருங்காட்சியக அனுபவத்தைத்தாண்டி, அனைவரையும் உள்ளடக்கிய உணர்வைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார் . இதுமக்களின் அருங்காட்சியகமாக இருக்கும் என்றும், சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

புதுதில்லியின் ரைசினா மலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் மத்தியநிர்வாகப் பகுதியை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் புதிய தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1,54,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகத் திகழும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...