இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற சுற்றுலாத்துறை பெரிய பங்களிப்பை வழங்கும்

இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ (ஐஹெச்இ 2024) எனப்படும் இந்திய சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியின் 7-வது பதிப்பை இன்று (03-08-2024) தில்லியில் மத்திய சுற்றுலாகலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விருந்தோம்பல் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஐஹெச்இ கொண்டிருந்ததாக கூறினார். இது இந்திய விருந்தோம்பல் துறையை வளர்ப்பது மட்டுமல்லாமல்உலக அரங்கில் அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல எனவும் இது விருந்தோம்பல் துறையின் மையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனைக்கு சுற்றுலாத் துறை பெரிய அளவில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மேலும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவிடல் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் பன்முகத்தன்மைபுதிய வணிக வாய்ப்புகள் உள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

ஐஹெச்இ 2024 இந்தியாவின் முதன்மையான விருந்தோம்பல் கண்காட்சியாக உள்ளது.  இந்த ஆண்டு இது 2024 ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. ஆடம்பர ஹோட்டல்கள்ரிசார்ட்டுகள்ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்கள்உணவகங்கள்கிளவுட் சமையலறைகள்  உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 20,000-க்கும் மேற்பட்ட இந்த தொழில்துறை சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...