இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற சுற்றுலாத்துறை பெரிய பங்களிப்பை வழங்கும்

இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ (ஐஹெச்இ 2024) எனப்படும் இந்திய சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியின் 7-வது பதிப்பை இன்று (03-08-2024) தில்லியில் மத்திய சுற்றுலாகலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விருந்தோம்பல் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஐஹெச்இ கொண்டிருந்ததாக கூறினார். இது இந்திய விருந்தோம்பல் துறையை வளர்ப்பது மட்டுமல்லாமல்உலக அரங்கில் அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல எனவும் இது விருந்தோம்பல் துறையின் மையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனைக்கு சுற்றுலாத் துறை பெரிய அளவில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மேலும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவிடல் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் பன்முகத்தன்மைபுதிய வணிக வாய்ப்புகள் உள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

ஐஹெச்இ 2024 இந்தியாவின் முதன்மையான விருந்தோம்பல் கண்காட்சியாக உள்ளது.  இந்த ஆண்டு இது 2024 ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. ஆடம்பர ஹோட்டல்கள்ரிசார்ட்டுகள்ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்கள்உணவகங்கள்கிளவுட் சமையலறைகள்  உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 20,000-க்கும் மேற்பட்ட இந்த தொழில்துறை சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...