பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக திகழும்

பாரம்பரிய தலங்களை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வந்த உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது வருடாந்திர கூட்டம் இன்று  நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், உலகப் பாரம்பரிய தலங்கள் மாநாட்டின்  முடிவுகளை செயல்படுத்த இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்வதன் வாயிலாக எல்லை கடந்து பணியாற்றும் திறன் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள 13 இடங்கள் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர்  குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 43-வது  பாரம்பரிய தலமாக அசாமில் உள்ள மொய்தாம்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர் இதன் மூலம் உலக அளவில் அதிக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி காசி விஸ்வநாதர் ஆலய பெருந்திட்ட வளாகம், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம், பண்டை கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாக கட்டுமானம் போன்ற பாரம்பரிய தலங்கள் பாதுகாப்பு பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...