பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக திகழும்

பாரம்பரிய தலங்களை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வந்த உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது வருடாந்திர கூட்டம் இன்று  நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், உலகப் பாரம்பரிய தலங்கள் மாநாட்டின்  முடிவுகளை செயல்படுத்த இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்வதன் வாயிலாக எல்லை கடந்து பணியாற்றும் திறன் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள 13 இடங்கள் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர்  குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 43-வது  பாரம்பரிய தலமாக அசாமில் உள்ள மொய்தாம்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர் இதன் மூலம் உலக அளவில் அதிக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி காசி விஸ்வநாதர் ஆலய பெருந்திட்ட வளாகம், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம், பண்டை கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாக கட்டுமானம் போன்ற பாரம்பரிய தலங்கள் பாதுகாப்பு பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்� ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு � ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ� ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...