வீடுதோறும் மூவண்ணக்கொடி

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பை வைல் பார்லேவில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்.எஸ்.எம்.இ) காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய (கே.வி.ஐ.சி) அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதனையொட்டி, கேவிஐசி மும்பையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேவிஐசி தலைவர் தலைமையில்மூவண்ணக்கொடி  யாத்திரையை ஏற்பாடு செய்தனர். வளாகத்தில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘மகாத்மா ஹால்’ ஐ கேவிஐசி தலைவர் திறந்து வைத்தார். இதையொட்டி கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடியேற்றும் விழாவில் உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள காதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காதி தொழிலாளர்கள், நூற்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் தமது உரையில், கதர் மூவர்ணக் கொடி என்பது வெறும் துணி மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளிலிருந்து இந்தியாவை விடுவித்த சுதந்திரப் போராட்டத்தின் எண்ணற்ற புரட்சியாளர்களின் தியாகம், போராட்டம் மற்றும் கனவுகளின் சின்னமாகும் என்று கூறினார். சுதந்தரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த நமது போராளிகளின் கனவு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இன்று நிறைவேறுகிறது என்று அவர் மேலும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், வணக்கத்திற்குரிய அண்ணலின் கதர் பாரம்பரியம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உத்தரவாதமாக மாறியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டிய அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், காதி மற்றும் கிராமத் தொழில்களின் விற்றுமுதல் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் கூறினார். முன்முறையாக இத்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன .

இந்த சந்தர்ப்பத்தில், இர்லாவில் அமைந்துள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மத்திய அலுவலகத்தால் மூவண்ணக்கொடி யாத்திரை நடந்தது, இதில் உள்ளூர்வாசிகள் மற்றும் கேவிஐசி அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கலைஞர்கள் மற்றும் கேவிஐசி ஊழியர்கள் மத்திய தலைமையகத்தில் தேசபக்தி பால்களை பாடினர். இந்த நிகழ்ச்சியின் போது, கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் ராஜ்பாஷா விசேஷாங்கின் இரண்டாவது பதிப்பையும் வெளியிட்டார், மேலும் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் கேவிஐசி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...