தேசிய விண்வெளி தினம் 2024

சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23 அன்று  கொண்டாடப்படும்  பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.  “நிலவைத் தொடும்போது உயிரினங்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பது தேசிய விண்வெளி தினம் 2024-ன் தொடக்கத்திற்கான மையப்பொருளாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு மீன்வளத்துறையுடன் இணைந்து தேசிய விண்வெளி தினத்தை 2024, ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடுமாறு சென்னையில் உள்ள இந்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதையொட்டி “மீன்வளத்துறையில் விண்வெளித் தொழில்நுட்பப் பயன்பாடு” என்ற தலைப்புடன் பயிலரங்கு நடத்தப்பட்டது.

இந்திய மீன்வள ஆய்வு நிறுவன விஞ்ஞானி டாக்டர் சி பாபு பயிலரங்கில் வரவேற்புரையாற்றினார். தொலையுணர்வு தொழில்நுட்பம் மீன்வளத்துறைக்கும், கடல்சார் ஆய்வுக்கும் மிகச்சிறந்த ஆதார வளமாகும் என்று அவர் பேசும் போது கூறினார். இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குநர் திரு ஏ டிபூர்டியஸ் தலைமையுரையாற்றினார்.

அகமதாபாதில் உள்ள இஸ்ரோவின் விண்வெளிப் பயன்பாட்டு மைய  விஞ்ஞானி டாக்டர் கே என் பாபு, தொலையுணர்வு மூலம் மீன்பிடி மண்டலங்களைக் கண்டறிவது என்ற தலைப்பில்  உரையாற்றினார். பெங்களூருவில் உள்ள கடல்சார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஸ்ரீகாந்த், தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு செந்தில் குமார், சிப்னெட் அமைப்பின் திரு ரவிச்சந்திரன், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அருண் ஜெனீஷ், சென்னை காசிமேடு பகுதி மீனவர்களின் பிரதிநிதி கடலார் வேலாயுதம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

இந்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி திரு ஒய் தருமர் நன்றியுரையாற்றினார். இந்தப் பயிலரங்கில் உள்ளூர் மீனவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், மாநில அரசு அலுவலர்கள்  உட்பட சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...