ஜார்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வதே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்

ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி, இன்று துவக்க வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் சென்றார். அந்த வழித்தடத்தில் 6 புதிய வந்தேபாரத் ரயில்களின் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில்கள் டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா மற்றும் கயா-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:புதிய வந்தே பாரத் ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசானவசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயண, மேம்பட்ட பாதுகாப்புஅம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்தரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளை துவக்கி வைத்து மோடி பேசியதாவது:
ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.650 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதை வழித்தடங்கள் மற்றும் பயண வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.இம்மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாமே என்ற திட்டத்தை நல்ல முறையில்செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஏழைகள், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறோம். அதற்கு அடுத்து பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினாார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...