ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி, இன்று துவக்க வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் சென்றார். அந்த வழித்தடத்தில் 6 புதிய வந்தேபாரத் ரயில்களின் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில்கள் டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா மற்றும் கயா-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:புதிய வந்தே பாரத் ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசானவசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயண, மேம்பட்ட பாதுகாப்புஅம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்தரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகளை துவக்கி வைத்து மோடி பேசியதாவது:
ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.650 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதை வழித்தடங்கள் மற்றும் பயண வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.இம்மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாமே என்ற திட்டத்தை நல்ல முறையில்செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஏழைகள், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறோம். அதற்கு அடுத்து பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினாார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |