மதுரையில் ஏப்ரல் , 28, 29ல் நடைபெறும் பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு அரசியலில் தலை கீழ் மாற்றத்தை உருவாகும் . பாரதிய ஜனதா எந்த கட்சிக்கும் சளைத்தது இல்லை,” என்று , பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநாடு பணிகளை ஆய்வுசெய்த அவர்
தெரிவித்ததாவது : ரிங்ரோட்டில் 67 ஏக்கரில்_அமைந்த முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது . அரங்கத்திற்கு முன்னாள்_பொருளாளர் சுகுமாறன் நம்பியாரின் பெயரிடபட்டுள்ளது.
பிப்., 1 முதல் ஒருலட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்பணி நடைபெறுகிறது . புதிய உறுப்பினர்களை மாநாட்டில் பங்கேற்க வைப்பதுடன், சுமார் 5 லட்சம்பேர் திரளுவர். மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ” தமிழ் தாய் யாத்திரை‘ நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சார்பில் பாரதியார் யாத்திரை, மகளிரணி சார்பில் கண்ணகி யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சார்பில் அம்பேத்கர்_சிலை ஊர்வலம் நடக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும், பாரதிய ஜனதா , ஆட்சி மலர்வதை உணர்த்த, மாநாட்டில் பார்லிமென்ட், சென்னை ஜார்ஜ்_கோட்டை மாதிரிகள் அமைக்கபடும். இவற்றை மக்கள் பார்க்கலாம். மாநாட்டின் முகப்பில் 10அடி உயரத்தில் கோட்டைசுவர் அமைக்கப்படும் . 27 லட்ச சதுரடியிலுள்ள அரங்கில் ஒருலட்சம் இருக்கைகள் போடப்படும். ஏப். 28 காலை நுழைவுகட்டணம் ரூ.10 வசூலிக்கபடும். மாலை பொது கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்
Tags; thamarai sangamam , தாமரை சங்கமம, மதுரை தாமரை சங்கமம்
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.