இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அவர் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது சார்லசுக்கு மோடி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இரு நாடுகள் இடையிலான வரலாற்று தொடர்பு, பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே உள்ள ஆழமான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சார்லஸ் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா-இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |