கீழக்கரை அருகே படகு கவிழ்ந்து16 பேர் வரை உயிரிழந்தனர்

கீழக்கரை அருகே படகு கவிழ்ந்து16 பேர் வரை உயிரிழந்தனர்ராமேஸ்வரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் வாளை தீவுக்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் என்ற கடலோரா கிராமம் உள்ளது . இந்த கிராமத்தை சேர்ந்த பலர் சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்பட வெளிநாடுகளில் வேலை பார்கின்றனர். இவர்களில் பலர் டிசம்பர்மாத விடுமுறையில் சொந்தஊருக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள குருசடை தீவு, அப்பா தீவு, முள்ளித்தீவு, வாழைத்தீவு, முயல் தீவு போன்ற தீவுப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம்.

இன்று காலை சீனி உருது என்பவரது குடும்பத்தினரும் அவரது உறவினர்களும் இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளில் பெரியபட்டிணத்திலிருந்து அப்பா தீவு மற்றும் முள்ளி தீவுக்குபுறப்பட்டனர். ஒரு படகில் ஆண்களும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்களும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சிறிது தூரத்தில் பெண்கள் வந்த படகை காணவில்லை. படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டியதூரம் வரை காணவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர் .

இது குறித்து தகவலறிந்து கடலோர காவல் படை, இந்திய கடற்படை மற்றும் பெரியபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஆகியோர் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே கானாமல் போன படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...