மரணதண்டனை விதிக்க சட்ட திருத்தம் ஜனாதிபதியிடம் முறையிட பா.ஜ.க முடிவு

மரணதண்டனை விதிக்க சட்ட திருத்தம்  ஜனாதிபதியிடம் முறையிட பா.ஜ.க   முடிவு பாலியல் பலாத்காரத்துக்கு மரணதண்டனை விதிக்க சட்ட திருத்தம் கொண்டுவருவதற்காக நாடாளுமன்ற சிறப்புகூட்டம் நடத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. டெல்லி பாலியல்பலாத்கார சம்பவம் குறித்தும் , மேலும் அதைதொடர்ந்து நடந்த போராட்டங்கள் குறித்தும் பாரதிய ஜனதா முன்னணி தலைவர்கள் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்துக்கு பின் மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து எதிர்க் கட்சிகளோடும், போராட்ட காரர்களோடும் பேசுவதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது . போராட்டம் நடத்திய மாணவர்களின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தடியடி நடத்தியது கண்டிக்க தக்கது . 80 மாணவர்கள் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தக்கூட அரசு தயாரில்லை. சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என கோரிக்கையை கூட அரசு நிராகரித்து விட்டது. இதனால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் செவ்வாய் கிழமை சந்தித்து நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தை நடத்த முறையிடுவோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...