அறிவை உருவாக்குவதில் பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவு

அறிவை உருவாக்குவதில்  பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவு  அறிவுசார் சமுதாயத்தை உருவாக்குவதில் குஜராத் முக்கியபங்கு வகிக்க விரும்புவதாகவும் , இளைஞர்களுக்கு மிகசிறந்த கல்வியை பெறுவதாகவும் அது இருக்க வேண்டும். அறிவை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவாகும் என்று முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு பிறகு தகவல்சாதனங்கள் ஒருசிலர் மட்டுமே பயன் படுத்தும் வகையில் இருந்தது. இபபோது தகவல் தொழில் நுட்பமும், சாதனங்களும் பரவலாக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவோர் அதன் வளர்ச்சிக்கும், உதவுபவர்களாக இருக்கின்றனர் . இந்த தொழில் நுட்பத்துக்கு யாரும் தனி உரிமை கோரமுடியாத வகையில் அனைவரும் இணைந்து இதை உருவாக்கிவருகின்றனர்.

இந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி முழுமை அடைந்தால் நமது சமுதாயம் அறிவுசார் சமுதாயமாகமாறும். ஒவ்வொரு தனிமனிதனும் பயனடையும் வகையில் தொழில் நுட்பமும் வளரும். மாற்றங்கள் நிகழும் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த மாற்றங்களில் குஜராத் உலக சமுதாயத்தோடு முக்கியபங்காற்ற விரும்புகிறது. அறிவை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் பங்களிப்புசெய்யும் சமுதாயமே எனது கனவாகும். இளைஞர்களுக்கு மிகசிறந்த கல்வியை பெறுவதாகவும் அது இருக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் உயர்கல்வி என்றால் வெறும் சான்றிதழ்களை மட்டும் விநியோகிப்பதில்லை. வேலை வாய்ப்பு, தொழில் திறன்களை கற்றுத்தரும் படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...