மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்

 மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தலை நடத்த காங்கிரஸ் கட்சி  திட்டம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்ட பேரவைத் தேர்தல்களோடு சேர்த்து, டிசம்பரில் மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புவதாக பாஜக. மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐ.மு., கூட்டணி அரசு நொண்டிவாத்து போன்று செயலிழந்து விட்டது. அது தற்ப்போதைக்கு சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவுடன் செயற்கை சுவாசகருவி பொருத்தப்பட்ட நிலையில் இருக்கிறது .

மக்கள் மத்தியில் தன் மீது அதிருப்தி அதிகரித்து வருவதையும், பொருளாதார நிலை மேம்பட போவதில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.

எனவே இழப்புகளை தவிர்க்கவும் ஓரளவுபலத்தையாவது தக்க வைத்துக்கொள்ளவும் ராஜஸ்தான், ம.பி., தில்லி மற்றும் சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலோடு டிசம்பரில் மக்களவைக்கு தேர்தலை நடத்துவதற்கு அக்கட்சி விரும்புகிறது.

அரசியல் சட்டஅமைப்புகளை தவறாக பயன் படுத்துவதற்கு காங்கிரஸ் பெயர்பெற்றது. இது, மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க., விலக்கிக்கொண்ட சில மணி நேரங்களில் முக.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ. நடத்திய சோதனைகளின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஆதரவு விலகலுக்குப் பிறகு நடத்தப்பட்டசோதனை என்பது ஒரு மிரட்டலாகும். “இதேகதிதான் உங்களுக்கும் ஏற்படும்’ என கூட்டணியில் உள்ள மற்றகட்சிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலாகும் இது.

நாளுக்கு நாள் கெட்டபெயரை சம்பாதித்துவரும் காங்கிரசுடன் கூட்டணியை தொடர்வது தனது வெற்றிவாய்ப்புகளை பாதிக்கும் என்பதை திமுக. உணர்ந்து விட்டது.

தற்போது சமாஜவாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகளும் உரிய சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றன. காங்கிரஸக்கு ஒருகூட்டணியை நிர்வகிப்பதற்கான திறமை இல்லாத காரணத்தாலும், அந்த கட்சி கூட்டணி தர்மத்தை பின் பற்றாததாலும் ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன.

மக்களவைக்கு முன் கூட்டியே நடக்க உள்ள தேர்தலுக்கு மக்கள் தயாராகவேண்டும். ஐ.மு., கூட்டணியில் நிலவரம் சரியில்லை என்பதால் அது எப்போது வேண்டு மானாலும் கவிழலாம். நாட்டுக்கு இது நல்லது என்பதோடு, நாட்டில் இப்போதுள்ள நிலையற்ற தன்மை முடிவுக்குவரவும் வழிவகுக்கும் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...