வருடப் பிறப்பு வருடத்தின் பிறந்த நாள்

வருடப் பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்த நாள். அதை நம் மனம்போல மாற்றிக்கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியுமா? அதை போலத்தான். நாம் என்றைக்கு பிறந்தோம் என்பதை நம்பெற்றோர் சொன்னதை கேட்டுத்தான் நாம் தெரிந்துகொள்கிறோம். நாம் பிறந்தது முதல் நம் பெற்றோர் நம் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு வரவே, நம்முடைய பிறந்த நாள்

என்றைக்குவருகிறது நமக்குத் தெரிகிறது. அதை போலவே வருஷம்பிறக்கும் நாளை சித்திரை மாதத்தில் நம்முன்னோர்கள் வழி வழியாகக் கொண்டாடி கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அதை அப்படியே பின்பற்றி, சித்திரைமாதத்தில் கொண்டாடுவது தான் சரியான செயலாகும்.

பிறந்தநாள் என்பதே ஜோதிடம் சம்பந்தப் பட்டது. இப்பொழுதெல்லாம் நாம் ஆங்கிலமாதம், ஆங்கிலத் தேதி என்று பின்பற்றி வந்தாலும், குழந்தை பிறந்தவுடன், ஜோதிடரிடம்சென்று அந்த தேதியில் என்னநாள், என்ன நட்சத்திரம் என்று கேட்டுக்கொண்டுதான், பிறந்தநாளை நிர்ணயம் செய்கிறோம். அந்தக்குழந்தை நல்ல ஆயுளுடன் , அமோகமாகவும் இருக்கவேண்டும் என்று அந்த நட்சத்திரத்தில் தான் ஆயுஷ் ஹோமம் செய்கிறோம். கோவிலில் அர்ச்சனையும் செய்கிறோம். இதேமுறையில் தமிழ் வருஷப்பிறப்பும் அமைந்துள்ளது.

தமிழ் புத்தாண்டு என்று நாம்சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்தநாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும்சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றியநாள் உலகத்துக்குப் பிறந்தநாள் ஆகிறது. அந்த பிறந்தநாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன. அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்தயிடத்தில் ஆரம்பித்து விண்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர சூரியன் எடுத்துக்கொள்ளும் காலம் ஒருவருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்டவடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப்பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாக கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகைகொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள்கொண்டது ஒருவருடமாகும். இந்தப்பயணம் ஆரம்பித்த நாளை வருஷப்பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.

இதில் தமிழ் வருஷப்பிறப்பு, தெலுங்கு வருஷ பிறப்பு என வித்தியாசங்கள் இருக்கின்றனவே என கேட்கலாம். இரண்டும் ஒன்று தான், தெலுங்கு  வருஷப்பிறப்பை ‘யுகாதி’ என சொல்வதிலிருந்து சதுர்யுகம் ஆரம்பித்த முதல் நாளையே அது குறிக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். சதுர்யுகம் ஆரம்பித்த நேரத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாகஇருந்தனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது அமாவாசை ஆகும். அதற்கு மறுதினமான வளர் பிறை பிரதமையில் யுகங்கள் ஆரம்பித்தன. அது மேஷராசியின் பூஜ்யம்பாகையில் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு அனைத்துக் கிரகங்களும் அதே இடத்தில், மேஷராசியின் பூஜ்யம் பாகையில் சந்தித்து கொள்வதில்லை. ஒவ்வொறு கிரகத்துக்கும் இருக்கிற வேகவித்தியாசத்தால் இப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் சூரியனது நிலையை மட்டுமே நாம் கணக்கில்கொள்கிறோம், தெலுங்கர்கள் உட்பட பிறமாநிலத்தவர்கள் சந்திரன் இருந்த இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூரியன் மேஷராசியின் பூஜ்யம் பாகையில் நிழைவதற்கு முன், சூரியனும், சந்திரனும் சேரும்நாளின் அடிப்படையில் அவர்கள் வருடப்பிறப்பு கொண்டாடவே, தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டுக்கும், மற்ற மாநிலத்தவர் கொண்டாடும் யுகாதிப்பண்டிகைக்கும் சிறிது வித்தியாசம் வருகிறது. ஆனால் இரண்டுமே சித்திரையில் சூரியன் நுழைவதை முன்னிட்டு கணக்கிடப்படுகின்றன.

சித்திரையும் சித்தர்களும்

தமிழ் நாட்டை பொறுத்த மட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடிஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப்பெயர்களை மறைவாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல்மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடைமாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதே போல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷராசியைத் ‘தலை’ என்றும், ‘தலைராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. ஒரிடத்திலும் தைமாதத்தை தலைராசி என்றோ, தலைமாதம் அல்லது முதல்மாதம் என்றோ சொல்லவில்லை. இடைக்காட்டு சித்தர் அவர்கள் மாதபலன்ளையும், வருடபலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின்பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தை கணக்கிட்டுள்ளார். சித்தர்களுக்கு தெரியாததா நமக்குத்தெரிந்து விட்டது? அவர்கள் கொடுத்துள்ள வழி முறையிலிருந்து நாம் பிறழலாமா?

உயிரினம் வளர்வதற்கு காரணமான பலமுக்கிய அவதாரங்களும் சித்திரையில் தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதிசெய்கிறது.

சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல்தேதியன்று என பார்த்தோம்.சித்திரையின் வளர் பிறை துவிதியையில் கிருதயுகம் பிறந்தது. சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது. சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

அஸ்வினியில் தொடங்கும் சித்திரை.

சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச்சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்தநட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர்.

அவர்களை குதிரைகளாக கொண்டு ஒற்றை சக்கரத் தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனிவருகிறான் என்று ரிக்வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினிதேவர்கள், தேவமருத்துவர்கள் எனப்படுகிறார்கள். நம்முடைய பிறந்தநாளை நாம்பிறந்த நட்சத்திரத்தின்போது கொண்டாடுவதுபோல புத்தாண்டு பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும் போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களை பெறுகிறது.

இதன் முக்கியத்துவதைச் சொல்லும் ரிக்வேத ஸ்லோகம் ஒன்றுள்ளது. ‘சூரியன் அஸ்வினியில் புறப்பட்ட போது இருந்தது போல, எல்லா தெய்வங்களும் எங்களுக்கு ஆயுளை கொடுக்கட்டும்’ என்கிறது அந்த ஸ்லோகம். அஸ்வினியில் சூரியன்பிறந்ததால் பலகோடி வருடங்கள் சூரியன் சென்றுகொண்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட இயல்பை உடைய ஒரு நாளை, அதன் தாத்பரியம் பார்க்காமல் தூக்கி எறிவது சரியல்ல.

சித்திரையும் மேஷ ராசியும்.

சித்திரை மாதத்திலிருக்கும் மேஷராசிக்கும் சிறப்புண்டு. மேஷம் என்றால் ஆடு என பொருள். அந்தராசியின் அமைப்பு ஒருஆட்டின் தலையைப்போல இருக்கவே அதை ஆடு என்றும், ஆட்டின் தலைஎன்றும் தமிழில் வழங்கி வந்திருக்கிறார்கள்.

சங்கத் தமிழ்நூலான நெடுநல் வாடையில், ஆடு-தலையாக கொண்டு சூரியன் வானத்தில்ஊர்ந்து செல்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. சோதிடப்படி, சூரியக்கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், ஆடுராசியான மேஷத்திலிருந்து பயணத்தை தொடங்குவதாலும், அந்த ராசியில் உச்ச மடைவதாலும், சூரியனுக்கு விசேஷமான இடத்துக்கு, அதை உணர்த்தும் படி ஆடுதுறை என பெயர் வந்துள்ளது.

ஆடுதுறைக்கு மருத்துவக் குடி என்று மற்றொரு பெயர்உண்டு. ஆடுராசியான மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரம் தொடங்கி வருடம் ஆரம்பிப்பதால் இந்தப்பெயர் ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் முக்கியத்துவம்

வருடம் என்பது உத்த ராயணம் என்னும் சூரியனது வடதிசைப் பயணத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதனால் உத்தராயணம் ஆரம்பிக்கும் தைமாதத்தில் வருடப்பிறப்பு கொண்டாடுவதே சரி என்று சிலர் சொல்லலாம். அது சரியல்ல. வருடம் என்பதன் அர்த்ததை நாம் தெரிந்துகொண்டால் இந்தசந்தேகங்கள் வராது. தமிழ் நிகண்டுகளில் வருடம் என்பதற்கு ஒப்பான பிறசொற்கள் இருக்கின்றன. அவை வர்ச்சரம், அயனம், ஆண்டு என்பன.

வர்ச்சரம் (வத்சரம்) என்றுசொன்னால் அது ருதுக்களக் கொண்டது. வசந்தகாலம், கோடைக்காலம் என்று மொத்தம் ஆறு பருவங்களை கொண்டது. ருதுக்களைப் பற்றி பேசவரும் போது வர்ச்சரம் என்பார்கள். அது வசந்தருதுவில் ஆரம்பிக்கிறது. அது குறிப்பிட்ட ஒருதினத்தில் ஆரம்பிக்காது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் ருதுக்களது அடிப்படையில் நாம் ஒன்றும் செய்வதில்லை.

அயனம் என்று சொன்னால் அது உத்த ராயணம், தட்சிணாயனம் என்னும் 2 அயனங்களை கொண்டது. அயனங்கள் அடிப்படையிலும் நாம் செயல்களை செய்வதில்லை. தைமாதத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கிறது. அந்தநாளில் உத்த்ராயணஹோமம் செய்தார்கள். இப்பொழுதெல்லாம் அதுவழக்கத்தில் இல்லை. மேலும் உத்தராயணாம் என்பது மிகச்சரியாக தை முதல் நாளான்று ஆரம்பிப்பதில்லை.

வருடம் என்று சொன்னால் அது மாதங்களைக் கொண்டது. இந்த மாதத்தில் இதைச் செய்யலாம் என்று வழக்கத்தில் நாம் பல விசேஷங்களைச் செய்கிறோம். அதனால் நம் வாழ்க்கையில் வருடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மாதங்கள் குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், சூரியன் குறிப்பிட்ட பாகையில் நுழையும் நேரத்தைக் கணக்கிட முடியும். அதனால் மாதமும், வருடமும், குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கவே பல செயல்பாடுகளைக் குறிக்க இது உபயோகமாக இருக்கிறது. இதன் காரணாமாகவே சித்திரையில் தொடங்கும் வருடக் கணக்கை நாம் பின்பற்றுகிறோம்.

சித்திரையின் சிறப்புகள்

சித்திரையில் வருடப்பிறப்பு அமைத்ததன் பிற காரணங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

· சித்திரையில் வரும் மேஷராசி தொடங்கி காலபுருஷன் இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்கு கிறவன் இந்தக் காலபுருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என பெயர். 12 மாதங்களும் அந்தகால புருஷனின் உடல் உறுப்புகளாக சித்தரிக்க படுகின்றன. மனிதனைப்பீடிக்கும் நோய்நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில்அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில்காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தைமாதம் என்பது கால புருஷனது கால்முட்டியாகும். தை மாதக்குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்து தான் வருடம் ஆரம்பிக்கவேண்டும். தைமாதத்தில் வருட பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அதுசரியல்ல.

· கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு. ஒருராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாக பகுப்பார்கள். ஒருராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒருகிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப்பொறுத்து அந்தக்கிரகம் பலனைக்கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது. இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண்ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும். மேலும் தையின் முதல் மூன்று நாட்கள் ‘கரி நாட்களக’ இருப்பதாலும், தையில் வருடப் பிறப்பு ஆரம்பிப்பது உசிதமல்ல.

· தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று மட்டுமே கணிக்க முடியும். ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.

· ‘நவநாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப்பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப் பிறப்பின் முக்கிய அம்சமாகும். சித்திரை வருஷப்பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தைமாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்கமுடியும்?

சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப்பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்க பலனைக்கேட்டார்கள். அந்தப்பலன்களின் அடிப்படையில், நாடு நலம்பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் அப்படியா? இயற்கையும் தங்களுக்கு அடிமைவேலை செய்யும் என்று கொக்கரிப்பவர்கள் இருக்கும்காலம் இது. கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்கச்செய்கிறேன் பார் என்றானாம் ஒருராஜா. அதற்காக கிழக்குத் திசைக்கு மேற்கு என்றும் மேற்குத்திசைக்குக் கிழக்கு என்றும் பெயரிட்டு, இதோ மேற்கில் சூரியன் உதித்துவிட்டது என்று பூச்சாண்டி வேலை காண்பித்தானாம். அப்படி ஒரு கூத்தும் தமிழகத்தில் நடந்தது,  தை மாதத்தை புத்தாண்டாக மாற்றி வேடிக்கை காட்டிய கலைஞரின் திமுக அரசுதான் அது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...