பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்

 பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி மர்ம நபர்களால் வெட்டப்பட்டார் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி (வயது 62) மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் .

எம்.ஆர். காந்தி பாஜக.,வின் மூத்த நிர்வாகியான இவர் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் வசித்துவருகிறார். தினமும் அதிகாலையில் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம்.

இன்று காலையிலும் அவர் நடை பயிற்சிக்கு சென்றார். காலை 6 மணியளவில் கான்கார்டியா பள்ளி அருகே நடந்து சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென எம்.ஆர். காந்தியை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அவரது தலையின் பின் பக்கம் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

எம்ஆர். காந்தி ரோட்டில் மயங்கி கிடந்ததை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பரவியதும் அவர்கள், அவர் சிகிச்சைபெறும் மருத்துவமனை முன்பு குவிந்தனர். நகரசபை தலைவி மீனாதேவ், பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் தேவ், வர்த்தகஅணி தலைவர் முத்துராமன், பொருளாளர் கணேசன், நகர தலைவர் ராகவன், முன்னாள் தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் நாகராஜன், பெருமாள்பிள்ளை, இந்து முன்னணி நகர தலைவர் ராஜா உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இந்த தகவல்தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு சென்று எம்.ஆர். காந்தியிடம் உடல்நலம் விசாரித்தார். மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டுமென்றும் கூறினார்.

இதற்கிடையே மருத்துவமனை முன்பு குவிந்த பாஜக.,வினர் எம்.ஆர். காந்தியை வெட்டியவர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று கோஷம் எழுப்பினர்.

திடீரென அவர்கள் ஆஸ்பத்திரிமுன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்து மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், டிஎஸ்பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுடலை மணி, ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்துசென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய பாஜக.,வினரிடம் சமரசம் பேசினர். எம்ஆர். காந்தியை தாக்கியவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர்.இதை ஏற்றுக்கொண்ட கட்சியினர் மறியலைகைவிட்டனர். இதையடுத்து எஸ்.பி. மணிவண்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் எம்.ஆர். காந்தியிடம் சம்பவம் குறித்து நேரில்விசாரித்தார்.

மேலும் எம்ஆர். காந்தி வெட்டுப்பட்டு கிடந்ததை பாஜக.,வினருக்கு தெரிவித்த நபரிடமும் சம்பவம் குறித்து கேட்டுஅறிந்தார். இதுபற்றி அவர் கூறும்போது, சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இதற்காக டிஎஸ்பி. உதயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்படும் என்றார்.

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பிள்ளையார்விளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலகிருஷ்ணன் புதூர், பள்ளம்பகுதிகளுக்கு சென்ற 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல்அறிந்து சுசீந்திரம் போலீசார் அங்கு விரைந்துசென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப்பேச்சு நடத்தினர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பதட்டமான பகுதிகளில் ஆயுதம்தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...