அக்ஷய திருதி தினத்தை நல்லுதவி தினமாக கொண்டாடலாம்

அக்ஷய திருதி தினத்தை நல்லுதவி தினமாக   கொண்டாடலாம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் மூன்றாம்பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியைநாள். "அக்ஷய " என்றால் குறைவில்லாதது என பொருள். இந்த அக்ஷய திருதியை மகா லட்சுமிக்கான நாள்.எனவே இந்நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபாரபலன்களை தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை

நினைத்து வணங்கு வதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் ஆரோக்கியம், சாந்தி, ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரசம்பிரதாயங்கள் சொல்கிறது.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகலசௌபாக்கியங் களையும் தரவல்ல லக்ஷ்மிதேவி எங்கெல்லாம் வாசம்செய்கிறாள்? எந்த இல்லங்களில் இருக்கிறாள்? எந்தபொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால்

தெய்வபக்தி, துணிவு, ஆற்றல், பொறுமை, இனியபேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள்.

சூரிய உதயத்திற்குமுன் எழுந்து , வீட்டை தூய்மையாக வைத்திருக்கும், குப்பைகளை வீட்டின்முன் கொட்டாமலும், பெருக்கி கோலமிட்டு, தீபமேற்றி , வழிபாடுசெய்கின்றனரோ அங்கே இருப்பாள்.

மஞ்சள், சங்கு, குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச்செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரணகும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் நீங்காது இருப்பாள்.

வீட்டில் பெண்கள் அதிகாலையெழுந்து குளித்து , குத்து விளக்கேற்றி, மகா லட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்தசெம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சைகற்பூரம், ஏலம், போட்டுவைத்து ,வாசனை மலர்களால் தெரிந்த மந்திரம்கூறி , பாயசம் நைவேத்தியம்வைத்து , மகா லட்சுமியை வணங்கி , பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, முடிந்தவரை தட்சிணை வைத்து தோலுரிக்காத , மட்டையுடன்கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம்வருவாள். அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுங்களேன்.

சில வருடங்களாக தங்கம்வாங்கினால் நல்லது என சொல்லி சொல்லி தங்கம்விற்பனையை பெரிக்கி விட்டனர். இந்நாளில் குருபகவானின் அருள்பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒருஐதீகம் உண்டு .அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்று தான் இந்நாளின் மகத்துவம் என கூறுவதுபேதமை. அக்ஷய திருதியை என்றால் தங்கம்வாங்கித்தான் கொண்டாடவேண்டும் என அவசியம் இல்லை.

(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளைநிற உலோகம் வாங்கினால் நல்லது என சொல்லி பிளாட்டினம் வாங்கசொல்லுகிறார்கள் .ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளிவாங்கினால் ஆகாதா ? இதை நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் ).

இந்த நல்லநாளில் நாம் செய்யவேண்டிய முக்கிய கடமை என்ன என்றால் பெரியோர்களையும் பித்ருக்களையும் வணங்குவதுதான் .

சத்ரு சாந்தியை பூஜிக்க சிறந்தநாளாக கருதப்படுகிறது மிருத சஞ்சீவினிமந்திரம் தெரிந்தவர்கள் அதை நிறையஜெபிக்கலாம்.இதனால் வியாதிகளின் வீரியம்குறையும் .

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்குமூலையிலும் சோழிகளைப்போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டுவரும் அம்சமாகும்.

அன்றைய தினம் , பசித்தோருக்கு உணவு படைத்தல், இயலாதோருக்கு உடைகொடுத்தல் , ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியைசெய்தல் போன்றவை நம்மை குறைவில்லா செல்வம் ,ஆயுள் , மகிழ்ச்சியுடன் வாழவைக்கும்.

இறைவனை வழிபடுவதோடு அன்று மனிதன்செய்யும் தானங்கள், அளப்பரிய புண்ணியத்தை தரும். விசிறி, குடை, எழுதுகோல், தண்ணீர் பாத்திரம், வஸ்திரம், பசு மற்றும் மனிதகுலத்திற்கு உணவு அளித்தல் இப்படிப் பலதானங்களை செய்யலாம்.

அக்ஷய திருதி தினத்தை "நல்லுதவி தினமாக " கொண்டாடலாம் இது நம் முன்னோருக்குசெய்யும் நன்றியாகும் .

அக்ஷய திருதியை தினமானது மகா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசு ராமரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது

மணிமேகலைக்கு இந்நாளில்தான் அக்ஷயபாத்திரம் கிடைத்தது. அதனால் அன்றுமுதல் மக்களின் பசியைபோக்குவதையே தன கடமையாக கொண்டிருந்தாள் .

சாபம்பெற்று தேய்ந்துபோன சந்திரன் , அட்சயதிருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்று , மீண்டும் அட்சயதிரிதியை தினத்திலிருந்து வளரத்தொடங்கினான்

இதை வைத்துப்பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும்காரியங்கள் வளர் பிறை போலவளரும்.

இன்றைய கால கட்டத்தில் தங்கம்தேவை என்றாலும் , வியாபார உத்திக்காக சொல்லபடும் "அக்ஷய்திருதியை அன்று தங்கம்வாங்க வேண்டும்" என்பதை சாஸ்த்திரமாக கருதுவதுதான் வருந்துவதற் குரியதாகும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...