அத்வானிக்கும், நரேந்திரமோடிக்கும் உள்ள உறவு, தந்தை, மகன் போன்ற உறவு

அத்வானிக்கும், நரேந்திரமோடிக்கும் உள்ள உறவு, தந்தை, மகன் போன்ற உறவு பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானிக்கும், நரேந்திரமோடிக்கும் உள்ள உறவு, தந்தை, மகன்போன்ற உறவு என்றும் உணவுபாதுகாப்பு சட்டம் உள்நோக்கம் கொண்டது என்றும் பா.ஜ.க., தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இல.கணேசன் நிருபர்களிடம் இது குறித்து மேலும் கூறியதாவது : மத்திய அரசு, அவசர, அவசரமாக கொண்டுவர முயற்சிக்கும், உணவுபாதுகாப்பு சட்டம் உள்நோக்கம் கொண்டது. அரசுகஜானா பணத்தில் காங்கிரஸ் அரசு குறைந்த விலையில் ஏழைகளுக்கு தானிங்கள் வழங்குது போல் வழங்கி, இத்திட்டம், தங்களால் கொண்டுவரப்பட்டது என கூறி மக்களிடம் ஓட்டுபெற்று மீண்டும் ஆட்சியமைக்க முயல்வதால் இத்திட்டத்தை பா.ஜ.க., எதிர்க்கிறது. லாபத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளில் ஐந்து சதவீதத்தை மத்திய அரசு விற்க விரும்புகிறது. இதை தனியாருக்கு விற்பதைவிட தமிழக அரசுக்கு விற்றால் பா.ஜ.க வரவேற்கும். ஏன்? எனில், தமிழக அரசுக்குவிற்றால் அதில் கிடைக்கும் லாபம் பொதுமக்கள் நலனுக்குசெல்லும்.

அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான உறவு தந்தை, மகன் உறவு போன்றது. தந்தையிடம் உங்கள் மகன் உங்களைவிட சிறந்தவராக உள்ளார் என்றால், தந்தை கவலையடைய மாட்டார். மகிழ்ச்சிதான் அடைவார். அது போன்றவர் அத்வானி. ஏழை கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்கள் கல்விசெலவை மத்திய அரசே மொத்தமாக ஏற்றுக்கொள்வது போல், இந்து ஏழை மாணவர்களின் கல்விசெலவை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக, கடந்த நான்கு வருடங்களாக பா.ஜ.க., போராடிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க., தனியாக போட்டியிட்டு மூன்று எம்.பி., சீட்டுகளை பெறுவதைவிட, கூட்டணியமைத்து 30 எம்.பி.,க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குபெறுவதை முக்கியமாக கருதுகிறோம். என்று இல. கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.