காஷ்மீர் தீவிரவாதிகள் அட்டூழியம்

 பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர்க்குள் ராணுவ உடையில் ஊடுருவிய 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள், போலீஸ் நிலையத்திலும் ராணுவமுகாமிலும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 போலீசார், 4 ராணுவவீரர்கள் உட்பட 10 பேரை கொன்றனர். முகாமில் புகுந்து தாக்கிய தீவிரவாதிகள் அனைவரையும் ராணுவம் சுட்டு கொன்றது.

ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்துக்குள் பாகிஸ்தானில்இருந்து நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் ஊடுருவினர். இந்தியராணுவ வீரர்களின் சீருடையை அணிந்திருந்த அவர்கள், ஆட்டோரிக்ஷாவில் வந்து கத்துவா என்ற இடத்தில் உள்ள ஹிரா நகர் காவல் நிலையத்தின்மீது காலை 6.45க்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கையெறிகுண்டுகளை வீசியபடி உள்ளேசென்றனர். திடீர் தாக்குதலால் போலீசார் நிலைக் குலைந்தனர். அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ மற்றும் 3 போலீசாரை தீவிரவாதிகள்கொன்றனர். காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 2 கைதிகளும் கொல்லப்பட்டனர்.

பின்னர், ஜம்மு , பதன்கோட் தேசியநெடுஞ்சாலைக்கு வந்த தீவிரவாதிகள், அந்தவழியாக வந்த லாரி ஒன்றை துப்பாக்கி முனையில் கடத்தி அதில் ஏறிகொண்டனர். சிறிது தூரம் அதில் சென்ற பிறகு, அதன் டிரைவரை சுட்டுகாயப்படுத்தி விட்டு வேறொரு டிரக்கை வழிமறித்து ஏறிகொண்டனர். அங்கிருந்து நேராக, சம்பாவில் உள்ள ராணுவ முகாமின் எதிரே வாகனத்தை நிறுத்தியதும் முகாமைநோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசினர். வாசலில் காவலுக்குநின்ற 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். பின்னர், முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், சரமாரியாக தாக்குதல்நடத்தினர். அதற்குள் ராணுவ வீரர்களும் உஷாராகி பதிலடிகொடுத்தனர்.

கமாண்டோ வீரர்களும் அழைக்கப்பட்டனர். தீவிரவாதிகள் தப்பி ஓடிவிடாதபடி ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் லெப்டினென்ட்கர்னல் பிகாரம்ஜித்சிங் உட்பட 2 பேர் பலியாகினர். 9 மணிநேரம் நடந்த கடும்சண்டைக்குப் பிறகு, 3 தீவிரவாதிகளையும் ராணுவவீரர்கள் சுட்டு கொன்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...