அனைத்து துறைகளிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்

 மத்திய, மாநிலஅரசுகள், அனைத்து துறைகளிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்; மூன்று மாதங்களுக்குள், இதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில், வேலை வாய்ப்பு வழங்கும்படி, மாற்றுத்திறனாளிகள், நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, “பெஞ்ச்’ முன், விசாரணைக்குவந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுத்துறைகளில் ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பது, பொதுவானவிதியாக இருப்பதால், அதை காரணம் கூறி, மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை நிராகரிக்ககூடாது. அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்விநிலையங்கள் ஆகியவற்றில், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதியவேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்கவேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிளுக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...