விரக்தியின் வெளிப்பாடே ராகுலின் பேச்சு

விரக்தியின் வெளிப்பாடே  ராகுலின்  பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, “எனது பாட்டி, தந்தையைப் போல நானும் கொல்லப்படலாம்’ என்று பேசினார். அத்துடன் பாஜக பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டுவருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கய்ய நாயுடு ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், இது போன்று உணர்வு பூர்வாகப் பேசுவதுடன் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

கடந்தகால நிகழ்வுகளை பேசுவதன் மூலம் அனுதாபத்தை திரட்டும்முயற்சியே இது. அவர்களது தோல்விகளுக்கு அவர்களிடம் எந்தவிளக்கமும் இல்லை. பா.ஜ.க.,வின் வளர்ச்சியை சந்திக்கும்திறன் காங்கிரஸிடம் இல்லை. அதற்கும்மேல், வலுவான, துடிப்புமிக்க தலைமை இல்லை. அதனால் தான், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பதைக் கூறி அனுதாபம் பெற முயற்சிக்கின்றனர்.

பிரிவினைவாத, வகுப்புவாத சூழ்நிலை அதிகரிப்பதாக ராகுல்கூறுகிறார். இதற்குகாரணம் யார்? தீவிரவாதம் வளர்ந்ததற்குகாரணம் யார்? சந்தேகமில்லாமல் காங்கிரஸ்தான். தேசவிரோத சக்திகளிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்தது காங்கிரஸ். அகாலிகளை வலுவிழக்கச்செய்ய பிந்தரன் வாலேவை ஊக்குவித்தது காங்கிரஸ்.

முஸ்லிம்லீகுடன் கைகோத்தது. ஒவைஸி, ஷகா புதீனுடன் நட்புறவுகொண்டது. வகுப்புவாத அரசியலை ஊக்குவித்ததே காங்கிரஸ்கட்சிதான். இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதன் மூலம் இந்திய வீரர்களின் இறப்புக்கும் காங்கிரஸ்தான் காரணமானது.

வகுப்புவாத தடுப்பு மசோதாவை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சிறுபான்மையினரை தங்கள்பக்கம் கொண்டுவருவதற்கான முயற்சியே இது. சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் எதுவும்செய்யவில்லை என்பதையே ரங்கனாத்மிஸ்ரா, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

அப்பாவி முஸ்லிம்கள் தண்டிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அண்மையில் மாநிலஅரசுகளுக்கு கடிதம் எழுதினார். இதுவும் சிறுபான்மையினரை தங்கள்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையே.

இந்த எல்லாமுயற்சிகளும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கானது அல்ல. தாற்காலிகமாக அவர்களை தங்கள்பக்கம் இழுத்து வாக்குகளை பெறுவதற்காகவே. இதுதான் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கானவழியா?

1967 முதல் நாட்டில் நடந்த கலவரங்களில், – 2002 குஜராத்கலவரம் உள்பட – பா.ஜ.க ஆட்சியை விட, காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகபட்சம்பேர் இறந்திருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் வெங்கய்யநாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...