சர்தார் படேல் சிலை அமைப்பு குழுவின் தமிழக அமைப்பாளராக வானதி சீனிவாசன் நியமனம்

 சர்தார் வல்லபபாய்படேல் சிலை அமைப்பு குழுவின் தமிழக அமைப்பாளராக பா.ஜ.க மாநிலச்செயலாளர் வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங் கரையில் முன்னாள் துணைபிரதமர் வல்லபபாய் படேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச்சிலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா படேலின் பிறந்ததினமான வியாழக்கிழமை (அக். 31) நடைபெற்றது. இந்த சிலை அமைக்க தேவையான 700டன் இரும்பை நாடுமுழுவதும் விவசாயிகளிடம் இருந்து திரட்ட குஜராத் அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

நாடுமுழுவதும் கிராமங்களில் விவசாயிகள் பயன்படுத்திய இரும்பு உபகரணங்களை திரட்டும்பணியில் இக்குழுவினர் ஈடுபடுவார்கள்.

சிலையுடன் அமைக்கப்படவுள்ள கண்காட்சி அரங்கில் நாடுமுழுவதும் அனைத்து கிராமங்களில் இருந்து மண்எடுக்கப்பட்டு கிராமத்தின் பெயருடன் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. நாடுமுழுவதும் கிராம மக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன்கலவையும், சுமார் 2 கோடி மக்களின் கையெழுத்தும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தமிழககுழுவின் அமைப்பாளராக பா.ஜ.க மாநிலச் செயலாளர் வானதிசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...