ஆண்கள் கையில் வரும் வருமானம், ‘டாஸ்மாக்’க்குக்கே செலவாகிறது

”நடப்பாண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

பா.ஜ., – வானதி சீனிவாசன்: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, இணையவழியில் விற்பனை செய்யும்திட்டம் உள்ளதா?

அமைச்சர் பெரியகருப்பன்: மகளிர் சுய உதவி குழுக்களின், 69 தயாரிப்புகள், ஏற்கனவே இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில், சுய உதவி குழுக்களால் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை, மின்னணு முறையில் விற்பனை செய்ய, அந்தந்த மாவட்டங்களில் இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை நடந்துவருகிறது.

சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும், தரமுள்ள பொருட்களை ஒருமுகப் படுத்த, பிரத்யேக மின் னணு இணையதள முகப்பு உருவாக்க, தற்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு அலுவலகங்களின் பயன்பாட்டுக்கு தேவையானப் பொருட்களை, சுய உதவிக்குழுக்களிடம் வாங்குவதற்கான வழிமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்: பெண்கள்கையில் வரும் வருமானம் முழுதும் குடும்பத்திற்கு செலவிடப்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம், பீடி, சிகரெட், ‘டாஸ்மாக்’ என செலவாகிறது; அனைத்து ஆண்களையும் கூறவில்லை. கடந்த, 2016ல் மத்தியஅரசு சார்பில், அரசு சார்பு நிறுவனங்கள் மின்னணுவழியாக பொருட்களை வாங்க, பிரதமர் உத்தரவிட்டார்.

அதன்படி, மத்திய அரசு இணைய தளம் வழியே, 1 லட்சம் கோடி ரூபாய் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, எந்தமுன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது? அமைச்சர்கள், சபாநாயகர் அலுவலகத்திற்கான பொதுபயன்பாட்டு பொருட்களை, மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வாங்க, அரசு கொள்கைமுடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்: மகளிர் குழு உற்பத்தி செய்த பொருட்களை, அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய, மத்திய அரசின் ‘ஜெம்’ இணையதளத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதுவரை, 116 மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழியாகவிற்பனை செய்யப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 20 ஆயிரம்கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை தாண்டி, 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தஆண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்வழங்க, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆண்கள் கையில் வரும் பணம், பீடி, சிகரெட், டாஸ்மாக் என செலவிடப் படுவதாக, வானதி சீனிவாசன் கூறியதற்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

பின், வானதி சீனிவாசன், ”அனைத்து ஆண்களையும் கூறவில்லை,” என கூறியதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...