பண்டிகைகளின் அரசன் தீபாவளி

 ஒவ்வொரு பண்டிக்கைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. பொங்கலுக்கு பொங்கலும், கரும்பும், ராம நவமிக்கு பாணகம், சிவராத்திரிக்கு கலி, கிருஷ்ண ஜெயந்திக்கு வென்னை மற்றும் சீடை, நவராத்திரிக்கு சுண்டல், சரஸ்வதி ஆயுத பூஜைக்கு பொரி கடலை, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, கார்த்திகைக்கு தீபமும், பொரியுரண்டையும்.

 

ஆனால் பண்டிகைகளின் அரசன் தீபாவளிக்கு ?

தீபாவளி என்றாலே அதிகாலை எண்ணை குளியலும், பட்டாசும்தான். பட்டாசு இல்லாத தீபாவளியை கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாது.

ஒரு பதினைந்து இருபத்து ஐந்து வருடம் முன்பு தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்பே பட்டாசுகள் ஒலிக்க தொடங்கும். தீபாவளி நெருங்க நெருங்க அது அதிகரிக்கும். ஆனால் இன்று. தீபாவளி அன்று ஒரு நாளைக்கு மட்டுமே என்று இது சுருங்கி விட்டது. ஏழைக் குழந்தைகளின் கைகளில் இருந்து பட்டாசுகள் பறிக்கப் பட்டு விட்டன. பட்டாசு என்பது பங்களா வீட்டு மக்கள் வெடிக்கும் பொருளாகி விட்டது. பணக்கார குழந்தைகளின் வெடி முழக்கங்கள், ஏழைக் குழைந்தகளின் ஏக்கங்களை இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும் ? பண்டிகை என்பது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியது அல்லவா ?

பட்டாசுகள் தேவையற்றவை என்று சிலர் சொல்வதுண்டு. காசை கரியாக்காதே, என்று சொல்பவரை பார்த்து கேட்கிறேன், நீங்கள் இறந்தால் உங்கள் உடம்பு கூடதான் கரியாகப் போகிறது. அந்த உடம்பிற்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள் நீங்கள்.

உலக அளவில் நடத்தப்படும் தொழிற்சாலை புகைகளாலும், வாகண புகைகளினாலும் நடக்காத சுற்று சூழல் மாசு தீபாவளி அன்று நடந்து விடப் போகிறதா ? பிள்ளை பருவத்தில் பாரம்பரியமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை தடுப்பதில் அப்படி என்ன ஒரு கேடு கெட்ட எண்ணம் பலருக்கு உள்ளது என்று புரியவில்லை. நம் கலாச்சாரத்தை சுத்தமாய் அழித்து விடும் நோக்கில் நடத்த படும் பல்வேறு சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. “ஹாப்பி நியு இயர்” என்று கோடிக்கணக்கான செலவில் சீனத்து பட்டாசுகளை வெடிப்பது இப்போது புதிய ஃபேஷன் ஆகி போய்விட்டது.

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது அதிகரிக்கப் பட வேண்டும். பண்டிகை கொண்டாட்டங்கள் தான் பாரத கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. தீபாவளி பண்டிகைகளின் அரசன், பட்டாசுகள் அந்த கோலாகல‌த்தின் அடிப்படை. அதை பிடுங்க நினைப்பவர்கள் அதற்கு பெரும் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கொழித்திடுவோம், இந்த ஒளிமிகு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடுவோம்.

One response to “பண்டிகைகளின் அரசன் தீபாவளி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...