2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல்செய்யப்படவுள்ளது. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு அதிருப்திதெரிவித்து பா.ஜ.க, திமுக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லியில் மக்களவை தலைவர் மீராகுமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப்பிறகு சுஷ்மா ஸ்வராஜ் (மக்களவை எதிர்க்கட்சி தலைவர்) கூறியதாவது ; எதிர்க் கட்சிகளின் அதிருப்தியுடன் ஜேபிசி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்வரைவு அறிக்கை தொடர்பாக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் பதிவுசெய்த அதிருப்தி குறிப்புகளை வசதிக்குதக்கபடி ஜே.பி.சி தலைவர் பிசி.சாக்கோ வெட்டிச்சுருக்கியுள்ளார்.
மக்களவையில் வியாழக் கிழமை அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது இது குறித்து பிரச்னை எழுப்புவோம் என்றார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.