வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வர போதுமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என முதல்வர்கள் மாநாட்டில் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினர். மோடிக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குஜராத்-முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது,
தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுபடுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடுகிறது . ஆனால் தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு இணையான ஆயுதங்களை மாநில போலீஷால் வாங்க இயலவில்லை .
ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் ஆந்திரா,காஷ்மீர், பஞ்சாப், ஒரிசா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை தர மறுக்கின்றது இதற்கு மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார் மேலும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்திவிட்டதாக தெரிவித்தீர்கள் . ஆனால் அவர்களின் ஆதிக்கமும் மற்றும் தாக்குதலும் அதிகரித்த வண்ணம் உள்ளது .கறுப்பு பணத்தை இந்தியாவுக்குல் கொண்டுவர மத்திய அரசு போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று சரமாரி கேள்விகளால் திணறடித்தார்
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.