வலுவாகிறது பாஜக. கூட்டணி

 பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 240 க்கும் அதிகமான இடங்களை பாஜக. கூட்டணி கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிகின்றன. மேலும் நரேந்திர மோடி பிரதமராக எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலான மக்கள் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக. கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில கட்ச்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக. எடுத்துள்ள இந்த முயற்சி காரணமாக பீகாரில் லோக் ஜனசக்தி, ஆந்திராவில் தெலுங்கு தேசம், அசாமில் அசாம் கனபரிஷத் ஆகிய 3 கட்சிகள் பாஜக. கூட்டணியில் சேருவது உறுதியாகியுள்ளது. இந்த 3 கட்சிகளில் பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி பாஜக.வுடன் சேருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே பீகாரில் பாஜக. அலை வீசுகிறது. அங்குள்ள 40 இடங்களில் 21 இடங்களை பாஜக. வெல்லவாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. தற்போது தலித்களின் ஒரேகட்சியான பஸ்வானின் லோக்ஜனசக்தி சேர்வதால் 40–ல் பெரும்பாலான இடங்களை பாஜக–லோக் ஜன சக்தி கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

பஸ்வான் போலவே சந்திரபாபு நாயுடுவும் தன் தெலுங்கு தேசம் கட்சியை பாஜக. கூட்டணியில் சேர்ப்பதில் உறுதியாக உள்ளார். தெலுங்கானாவுக்கு பாஜக. அதரவு தெரிவித்தபோதும் சீமாந்திரா மாநில மக்களுக்கு சிறப்பு பொருளாதார நிதி ஒதுக்கீட்டை பாஜக. போராடி பெற்றுக்கொடுத்தது.

இதன்காரணமாக சீமாந்திரா மக்களிடம் பா.ஜ.க வுக்கு ஆதராவான மனநிலை உருவாகியுள்ளது. எனவே பாஜக–தெலுங்குதேசம் கூட்டணி சீமாந்திராவில் அதிகஇடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானாவில் மோடிக்கு ஆதரவாக 20 சதவீத மக்கள் இருப்பது ஒருசர்வேயில் தெரியவந்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் சுமார் 14 சதவீத வாக்குவங்கி உள்ளது. எனவே தெலுங்கானாவிலும் பாஜக–தெலுங்குதேசம் கூட்டணிக்கு ஒரளவு வெற்றிகிடைக்கும் என்று தெரிகிறது.

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது போல வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆரதவுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக அசாம் கனபரிஷத்கட்சியை பா.ஜ.க. அணிக்குள் கொண்டு வர ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, அமித்ஷா ஆகியோர் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பாஜக–காங்கிரஸ் ஆகிய இரு கட்சிக்கும் சமமான வாக்கு வாங்கியே உள்ளது. அசாம் கனபரிஷத் கட்சிக்கு 15 சதவீத ஓட்டுள்ளது.

எனவே பாஜக–அசாம் தனபரிஷத் கூட்டணி ஏற்பட்டால் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்று பாஜக. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறார்கள்.

பாஜக., பாராளுமன்றக் குழு கூட்டம் வரும் 27–ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பாஜக. வின் கூட்டணி கட்சிகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எந்தெந்த கட்சிகள் பாஜக.வுடன் கைகோர்த்து ஓரணியில் திரள்கின்றன என்பது 27–ந் தேதி தெரியவரும்.

இதை கருத்தில் கொண்டே இன்னும் 2 நாளில் பாஜக–தேமுதிக. கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வலுவான மாநில கட்சிகளுடன் சேர்வதன் மூலம் பாஜக. கூட்டணி மிக எளிதாக சுமார் 300 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...